தமிழகத்திற்கு தினசரி 20 ஆயிரம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு.. பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டிசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு அதிகம் ஏற்படும் நபர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தினசரி 7000 ரெம்டெசிவிர் குப்பிகள் வழங்கி வந்தது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ரெம்டெசிவிர்
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தினசரி ரெம்டெசிவிர் குப்பிகளின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்குக் கூடுதலாக ரெம்டிசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் கடிதம்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் ரெம்டிசிவிர் மருந்து ஒதுக்கீட்டு அளவினை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையினை ஏற்று நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டிசிவர் மருந்தினை தற்பொழுது நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக தன் நன்றியினை முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மத்திய அரசுக்கு நன்றி
கொடிய கொரோனா பெரும் தொற்றினை எதிர்த்துப் போராடிடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது எனவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் விற்பனை
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இனி தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறை பின்பற்றப்படும் எனத் தமிழக அரசு இன்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications