முஸ்லிம்கள் தொப்புள் கொடி உறவு.. இதுதான் திராவிட மாடல் - ரமலான் விழாவில் நெகிழ்ந்த முதலமைச்சர்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமின்றி உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
நானும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இந்த மாதம் இஸ்லாமிய பெருமக்களுக்கு புனிதமாக கருதப்படுகிறது.

ஏழைகளுக்கு உதவும் இஸ்லாமியர்கள்
ரமலான் மாதத்தில் நோன்பிருந்து ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து கொண்டாடி வருகிறோம். தங்களை வருத்திக் கொண்டு உணவு உண்ணாமல் நோன்பிருந்துகொண்டு இந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த ரமலான் மாதத்தில் செய்யப்படக்கூடிய உதவி மனிதநேயத்தின் மறு உருவமாக காட்சியளிக்கிறது.

திராவிட மாடல்
தமிழ்நாட்டில் உள்ள இந்த மனிதநேயம் நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுவும் ஒருவகை திராவிட மாடல்தான். இதை சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும், ஆத்திரம் வரும், கோபம் வரும். அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியது அல்ல. எல்லோருக்கும் எல்லாம்... அனைவருக்கும் உதவி சேர வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை, லட்சியம். அந்த அடிப்படையில்தான் திராவிட மாடல் என்று சொல்கிறோம்.

7 ஆண்டுகளாக ரமலான் நிகழ்ச்சி
கொளத்தூர் தொகுதியில் 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்த ரம்ஜான் வருகிறபோது உங்களை போன்றவர்களுக்கு இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். 7 ஆண்டாக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னார். அந்த வழியில் நின்று கலைஞரின் வழிகாட்டுதலோடு எதிர்க்கட்சியாக இருந்தபோதே இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்.

வேறுபாடின்றி உதவி
ஏழை, எளிய மக்களுக்கு சாதி, மத வேறுபாடின்றி நலத்திட்ட உதவிகள், கல்வி உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 ஆம் தேதி திமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு என்ன செய்கிறது என்பதை நான் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பது இல்லை. 2006 ஆம் ஆண்டு நாம் ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக நம்மை பார்த்து மைனாரிட்டி ஆட்சி என்று சொன்னார்கள்.

சி.ஏ.ஏ. எதிர்ப்பு
அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், இது மைனாரிட்டிகளுக்காக நடைபெறக்கூடிய ஆட்சி என்று சொன்னார். இது தொப்புள்கொடி உறவு. அதிமுக ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் இந்த சமுதாயத்துக்கு எதிராக சட்டம்கொண்டு வரப்பட்டபோது எதிர்த்து போராடினோம். வாக்களித்தோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தோம்.

வீட்டு பிள்ளையான திமுக
சிறுபான்மை மக்களுக்கு 3.5% இடஒதுக்கீட்டை அளித்தது திமுக. இன்று டாக்டர்களாக, பொறியாளர்களாக, அரசு அதிகாரிகளாக சிறுபான்மையினர் இருப்பதை கண்டு மகிழ்கிறோம். சிறுபான்மை மக்களுக்கு குரல்கொடுத்த உறவுதான் உங்கள் வீட்டு பிள்ளையான திமுக. திமுக என்றால் அதில் நானும் ஒருவன். நான் எப்போதும் உங்களோடு இருப்பவன். நீங்களும் என்னோடு இருப்பவர்கள். அதுவே திமுக, சிறுபான்மை சமூகம் இடையே இருக்கக்கூடிய நல்லுறவு.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications