தமிழக சட்டம், ஒழுங்கு குறித்து.. டிஜிபி சைலேந்திரபாபுவுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டம், ஒழுங்கு குறித்து டிஜிபி சைலேந்திரபாபுவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யயப்பட்டு வேட்புமனு பரிசீலனையும் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து டிஜிபி சைலேந்திரபாபுவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் தலைமை செயலாளர் இறையன்யு, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அசம்பாதவிதம் நடைபெறாமல் தடுக்க எந்தவித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது?
பதற்றம் உள்ள பகுதிகளில் என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்? என்பது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் போலீசாரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து டிஜிபி, முதல்வரிடம் விளக்கினார். எந்தவித சட்ட, ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications