தீபாவளி இனிப்பு தயாரிப்போர்!.. உணவு பாதுகாப்பு துறையில் லைசன்ஸ் பெற உத்தரவு
சென்னை: தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் லைசென்ஸ் இன்றி தயாரித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பலகாரங்கள், இனிப்பு வகைகள்தான் பிரதானம். தீபாவளிக்கு இனிப்புகள் செய்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வர்.

வீடு மட்டுமல்லாமல் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கும். இதற்காக கடைகளில் பல்க் ஆர்டர் கொடுக்கப்படும். வீடுகளில் செய்ய முடியாதவர்களும் கடைகளில் பல்க் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்வர்.
இப்படி ஆர்டர் கொடுத்து வாங்கும் இனிப்புகள் சுத்தமாக செய்யப்படுகிறதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிமம் இல்லாமல் இனிப்பு, பலகாரங்களை தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களின் மேல் உணவு தயாரிப்பாளரின் முழு முகவரி இருக்க வேண்டும். அது போல் பேக்கிங் உணவு பொருளில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி நிச்சயம் இருக்க வேண்டும். சைவம் மற்றும் அசைவ குறியீடும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த திருமண மண்டபங்கள், சமுதாய நலக் கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி இனிப்பு தயாரிக்கும் போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும். முன்னதாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை குறிப்பிட்டிருக்கிறது.
அது போல் முறையாக உரிமம் பெற்று தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகளை தயார் செய்ய வேண்டும். இல்லையென்றால் தரமற்ற உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அது அழிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இனிப்பு ,கார வகைகள் , கேக் போன்ற பேக்கரி உணவுகளை தயாரிக்கும் போது விற்பனையாளர்கள் முறையாக உரிமம் இல்லாமல் தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்வீட்ஸ் விநியோகிக்கும் தீபாவளி சீட் நடத்துபவர்களும் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications