Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 ஆண்டுகளுக்கு பின்னர் புத்துணர்வு பெற்ற நமக்கு நாமே திட்டம்.. ரூ.100 கோடி ஒதுக்கியது தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஊரகப் பகுதிகளில் வளர்ச்சிக்காக நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் புத்துணர்வு பெற்றுள்ளது.

TN Government has allocated Rs 100 crore for Namakku Naame project

ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு முக்கிய அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் அதாவது கிராம ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டுதல், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுதல் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

பொது மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்துவதுமே நமக்கு நாமே திட்டத்தின் பிரதான நோக்கமாகும். தமிழகத்தில் நமக்கு நாமே திட்டத்தில் கீழ் 2021-22ம் ஆண்டு நிதியாண்டின் திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஒதுக்கி உள்ளளதாக ஊரக உள்ளாட்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த திட்டம் மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எந்தெந்த பணிகள் செயல்படுத்த வேண்டும், அவை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஒரு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாயில், 50 சதவீதத் தொகை இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டள்ளது. மீதமுள்ள 50 சதவீத தொகையான 50 கோடி ரூபாய் பணிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் போது ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+