Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sunday Lockdown: பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. ஹோட்டல்களுக்கு திடீர் சலுகை அறிவித்த தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு 10,000-ஐ கடந்து விட்டது. ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து உச்சத்தில் உள்ளன. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு

ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு

இனி ஞாயிற்றுக்கிழமைதோறும் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகைக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. இதேபோல் மெட்ரோ ரயில்களும் இயங்காது. ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்லும்போது பயணச் சீட்டை காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்

புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்

அதே வேளையில் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இன்று இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் பங்க்குகளும் செயல்படலாம்.

திருமண விழாவுக்கு செல்லலாம்

திருமண விழாவுக்கு செல்லலாம்

இதேபோல் தமிழகத்தில் இன்று திருமண விழாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமண விழாவுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவகங்கள் வாடிக்கையாளர் வீடுகளில் உணவு விநியோகிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 உணவகங்களுக்கு சலுகை

உணவகங்களுக்கு சலுகை

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையில் (Own Delivery) மூலமாகவும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதியளிக்கப்படும். இவ்வாறு வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+