பலவருட ஏக்கம்.. வார விடுப்பு முதல் ஓவர் டைம் ஊதியம் வரை.. காவல்துறையை குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு போலீசாருக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகைநேர ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. முன்பே சட்டசபையில் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது முறையான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போலீசார் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகளுக்காக காத்து இருந்தனர். பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இந்த மானியக் கோரிக்கையில் வெளியாகலாம் என்று போலீசார் எதிர்பார்த்து இருந்தனர். அதேபோல் கடந்த 13ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
காவலர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில், பொது மக்களின் பிரச்சினைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க ஒரு கைபேசி செயலி உருவாக்கப்படும். காவல் நிலைய அதிகாரி விசாரணை அறிக்கை அந்த செயலியில் தரவேற்றம் செய்யப்படும். காவல்துறையினரின் நலன்களை பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி 800 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது.

முக்கிய அறிவிப்பு
அதேபோல் காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம் இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவிப்பு காவலர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. இது காவலர்களின் பல நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அதேபோல் காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணி காத்திட ஏதுவாகவும் தனது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் வார விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விடுப்பு
இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும். காவல் ஆளிநர்கள் தற்செயல் விடுப்பு ஒப்புதல் அளிக்கும் மென்பொருள் ( CLAPP ) APP 1 ரூபாய் 10 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது காவலர்களின் பல நாள் கோரிக்கை ஆகும். நாங்கள் மட்டும் விடுப்பே இல்லாமல் வேலை பார்க்கிறோம். இது பணி சுரண்டல் என்று பல முறை காவலர்களின் பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
Recommended Video

கோரிக்கை
அனைத்து முக்கிய நாட்கள், பண்டிகை நாட்களிலும் எல்லோருக்கும் விடுப்பு வந்தாலும் எங்களுக்கு மட்டும் பணி இருக்கும். வார விடுப்பு கூட இல்லாமல் தொடர்ந்து வேலை பார்க்கிறோம். வேறு எந்த துறையிலும் இந்த நிலை கிடையாது. மக்களை காக்கும் எங்களுக்கும் குடும்பத்தோடு நேரம் செலவிட வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் பல வருடமாக கோரிக்கைகளை வைத்து வந்தனர். இதை முதல்வர் ஸ்டாலின் தற்போது நிறைவேற்றி உள்ளார்.

வரவேற்பு
போலீசார் தரப்பில் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாருக்கு வாராந்திர விடுப்பு, பிறந்த நாள் விடுப்பு வழங்குவது தொடர்பாக முறையான அரசு ஆணை, வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
1. காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம்செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்
2. வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும். ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.
3. காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்தநாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்
4. தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு
தெரிவிக்கப்பட வேண்டும்.
5. மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வார விடுமுறை மட்டுமின்றி பிறந்த நாள் விடுமுறை, மிகைநேர ஊதியம் உட்பட அறிவிப்புகள் போலீசாரை பெரிய அளவில் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
-
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications