Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த சசிகலா .. 'அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது'.. அமைச்சர் சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரமாக உள்ள சசிகலா முழு நேர அரசியலில் இறங்கி விட்டார். அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து பேசும் அவர் மழை, வெள்ள காலங்களில் மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருகிறார்.

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களில் குறை இருந்தால், மக்கள் ஏதாவது கோரிக்கை வைத்தால் அது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். தற்போது சசிகலாவும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

சசிகலா வைத்த கோரிக்கை

சசிகலா வைத்த கோரிக்கை

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கரும்பு வாங்க வேண்டும், அவர்களது வங்கி கணக்கிலேயே பணம் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சசிகலா கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் மதுரையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பதில் சொல்ல முடியாது

பதில் சொல்ல முடியாது

அப்போது கரும்பு கொள்முதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சசிகலா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பது குறித்து நிருபர்கள் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் அளித்த அவர், ' சசிகலாவிற்கெல்லாம் பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை' என்று கூறினார். முன்னதாக அமைச்சர் நிருபர்களிடம் பேசியதாவது:-

17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்

17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்

மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளை பத்திரமாக ஊர் கொண்டு சேர்க்கவும் மீண்டும் அவர்களது இடத்திற்கு வந்து சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அதிகாரிகள் தரப்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமும் இன்றி பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை

முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது தவறு நடக்காமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போல ஓமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தமிழக முதல்வரின் உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது . கட்டுப்பாடுகள் தொடர்கிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+