தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த சசிகலா .. 'அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது'.. அமைச்சர் சுளீர்
சென்னை: அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரமாக உள்ள சசிகலா முழு நேர அரசியலில் இறங்கி விட்டார். அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து பேசும் அவர் மழை, வெள்ள காலங்களில் மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருகிறார்.
தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களில் குறை இருந்தால், மக்கள் ஏதாவது கோரிக்கை வைத்தால் அது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். தற்போது சசிகலாவும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

சசிகலா வைத்த கோரிக்கை
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கரும்பு வாங்க வேண்டும், அவர்களது வங்கி கணக்கிலேயே பணம் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சசிகலா கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் மதுரையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பதில் சொல்ல முடியாது
அப்போது கரும்பு கொள்முதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சசிகலா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பது குறித்து நிருபர்கள் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் அளித்த அவர், ' சசிகலாவிற்கெல்லாம் பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை' என்று கூறினார். முன்னதாக அமைச்சர் நிருபர்களிடம் பேசியதாவது:-

17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்
மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளை பத்திரமாக ஊர் கொண்டு சேர்க்கவும் மீண்டும் அவர்களது இடத்திற்கு வந்து சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அதிகாரிகள் தரப்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமும் இன்றி பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது தவறு நடக்காமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போல ஓமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தமிழக முதல்வரின் உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது . கட்டுப்பாடுகள் தொடர்கிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications