கிட்ட மட்டும் போயிடாதீங்க சார்.. செஞ்சுரி அடிக்க போகும் தக்காளி! போன வருஷம் கண்ணு முன்னாடி வருமே!
சென்னை : வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று 65 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், சில்லறை விற்பனை கடைகளில் 90 ரூபாய் வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் புரட்டாசி மாதத்தில் எதிர்பார்த்த மழை அளவு இல்லை.

இதனால் பகல் நேரங்களில் கோடை வெப்பத்தை விட வெயில் அதிகமாகவே இருக்கிறது. காலை முதல் இரவு வரை வெப்பம் கொளுத்தி எடுக்கும் நிலையில் சில நிமிடங்கள் கூட மழை பெய்வதில்லை. அப்படியே பெய்தாலும் புழுக்கம் காரணமாக மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது. இது குறிப்பாக விவசாய நிலங்களில் தண்ணீர் இல்லாததால் காய்கறிகள், பூக்கள், தென்னை மரங்கள் உள்ளிட்டவை கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் அவற்றை வெட்டி விறகுக்காகவும் செங்கல் சூளைகளுக்கும் விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் தேனி, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், காய்கறி, வாழை உள்ளிட்ட உணவு பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளும் கடும் இன்னலை சந்திக்கின்றனர்.
இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால் விவசாயிகள் கடும் இன்னலை சந்தித்து இருக்கின்றனர்.
வழக்கமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் நிலையில், தற்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. மேலும் வெயில் மற்றும் மழை என மாறி மாறி வருவதால் தக்காளி பழங்கள் செடியிலேயே வெதும்பி விடுகின்றன. மேலும் பூச்சி தாக்குதலால் தக்காளி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ற தரத்திற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 50 வரை விற்பனையான நிலையில் இன்று 80 ரூபாய் வரை விற்பனையாகிறது.
காய்கறி சந்தையில் இருந்து தக்காளியை வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்யும் வியாபாரிகள் 90 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக விரைவில் தக்காளி விலை நூறு ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது. இதே போல் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் முதல் தர சின்ன வெங்காயம் 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications