‘சின்னவர்’ நான் அப்படி சொல்லவேயில்லையே! ஏற்கனவே இருக்கும் பிரச்சினை பத்தாதா? உதயநிதி யூடர்ன்?
சென்னை : தன்னை சின்னவர் என அழைக்க வேண்டும் என தான் யாரையும் சொல்லவில்லை எனவும் தன்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்துவதாலேயே தன்னை மூன்றாம் கலைஞர் என அழைக்க வேண்டாம் என தான் கூறியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், திமுக தொண்டர்கள் கோஷம்போடும்போது தன்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைப்பதில் தனக்கு துளிகூட விருப்பமில்லை என்றார்.
மேலும் சிலர் தன்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். அதனால் இனிமேல் 'சின்னவர்'; என்றே அழையுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் மீம்கள் பறக்க சற்றே விவாதம் சூடுபிடித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் தன்னை சின்னவர் என அழைக்க வேண்டுமென யாரிடமும் சொல்லவில்லை என உதயநிதி ஸ்டாலினே கூறியிருக்கிறார். எங்கே? எப்போது ? என பார்க்கலாம். சென்னை ஆதம்பாக்கத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கொடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் தான் இவ்வாறு கூறியுள்ளார்.

அடிமை இல்லை
நிகழ்ச்சியில் பேசிய அவர்," திமுகவை பொருத்தவரை யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் தான் நான் அடிமை. என்னை யாரும் சின்னவர் என்று அழைக்க வேண்டும் என கூறவில்லை. ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதா. என் மீது உள்ள அன்பால் மூன்றாம் கலைஞர் என அழைக்கிறார்கள். என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு முத்தமிழர் அறிஞர் கலைஞரை சிறுமைப்படுத்துகின்றனர்.

ஒரே கலைஞர் தான்
கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான் அதுவும் ஒரே கலைஞர் தான் உங்கள் வயது அனுபவம் ஆகியவற்றுக்கு நான் சின்னவன். அதே நேரத்தில் என்னை சின்னவர் என கூப்பிடுமாறு நான் யாரையும் சொல்லவில்லை. இளைஞர் அணி செயலாளராக மூன்று ஆண்டுகள் கழித்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் ஆகியோரை நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை. நான் பார்த்ததெல்லாம் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், மற்றும் தளபதி ஸ்டாலினை தான்.

கட்சிக்கு கிடைத்த வெற்றி
நான் மிகவும் ராசிக்காரன் என அண்ணன் ஆர்.எஸ்.பாரதி கூறினார். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்றம் சட்டமன்றம் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குகளை நான் கேட்டதால் தான் வெற்றி கிடைத்தது என்பது இல்லை. முத்தமிழறிஞர் கலைஞர், தலைவர் ஸ்டாலின், மற்றும் தொண்டர்களுக்கு உழைப்பால் தான் இந்த வெற்றி கிடைத்தது. இந்த முழு வெற்றிக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மட்டுமே பங்கு உள்ளது" என பேசினார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்!












Click it and Unblock the Notifications