Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் பழிவாங்கல்.. பாசிச போக்கு.. மத்திய அரசு சட்டத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் கடும் சீற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12ல், ராஜ்யசபாவில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம்


இதனையடுத்து "ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021" பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இது ஜூலை 2 வரை பொதுமக்களின் பார்வைக்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை முடக்கிவிடும் என்று, சினிமா துறையை சார்ந்தவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

சூர்யா எதிர்ப்பு

சூர்யா எதிர்ப்பு

ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல் வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள்" என்றுதெரிவித்தார்.

திரைத்துறையிலிருந்து வந்தவர்

திரைத்துறையிலிருந்து வந்தவர்

இதைவிட காட்டமாக உதயநிதி ஸ்டாலின் இந்த சட்ட மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர் உதயநிதி. தற்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இந்த நிலையில்தான், மத்திய அரசின் இந்த சட்ட மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அவர்.

கடும் கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021' படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+