வரலாற்று தேவை..லாப நட்டங்களை பார்க்காமல் திமுகவுடன் மதிமுக கூட்டணி..இதுதான் காரணம்! போட்டுடைத்த வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இந்துத்துவ கும்பல் வேரறுக்கப்பட வேண்டும் என்று தான் மதிமுக உறுதியாக முடிவெடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் அரசியல் லாப நட்டங்களை பார்க்காமல் பயணத்தை தொடர்கிறது எனவும், 2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியை பெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி மூலம் திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்ததாக வைகோ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இணைந்த அவர் தற்போது வரை பயணித்து வருகிறார்.

2019 மக்களவைத் தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களை திமுக தலைமையில் மதிமுக சந்தித்திருக்கிறது. திமுகவே கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்த வைகோ தொடர்ந்து திமுகவில் பயணிக்க என்ன காரணம் என சிலர் விமர்சித்து வந்தனர்.

Vaiko MDMK DMK

இந்த நிலையில் அதற்கெல்லாம் பதில் அளித்திருக்கிறார் வைகோ இந்துத்வா கும்பல் வேரடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் திமுகவுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதாக கூறி இருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. மதிமுகவின் 32 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வரும் நிலையில் வைகோ தன் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில்," மதிமுக தனது அரசியல் பயணத்தில் 31 ஆண்டுகளைக் கடந்து 32-வது ஆண்டில் மே 6-ம் தேதி அடியெடுத்து வைக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்று தேவை எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்துத்துவ கும்பல் வேரறுக்கப்பட வேண்டும் என்று தான் மதிமுக உறுதியாக முடிவெடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் அரசியல் லாப நட்டங்களை பார்க்காமல் பயணத்தை தொடர்கிறது.

இந்த சூழலில் 2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியை பெறும். அதேநேரம், கடந்த 31 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடந்த ஏப்.20-ம் தேதி மதிமுக நிர்வாகக் குழுவில் உணர்ச்சி பிரவாகமாக நிகழ்வுகள் நடந்தேறின. நீர் அடித்து நீர் விலகாது என்பதை கட்சியின் நிர்வாகக் குழு திட்டவட்டமாக பிரகடனம் செய்திருக்கிறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிர்வாகிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மதிமுகவின் 32-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வீடுகளில், நிர்வாகிகளின் சொந்த இடங்களில் கொடியேற்று விழாவை நடத்த வேண்டும். மேலும், நலத்திட்ட உதவி வழங்குதல், தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம் என சிறப்பாக கொண்டாட வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 117-வது பிறந்தநாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்தலாம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியின் அனைத்து சார்பு அமைப்புகளும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+