ஈபிஎஸ் முகத்தை பார்த்தீங்களா.. ‘இன்னும் ஒரே வாரத்தில் பாருங்க..’ - வைத்திலிங்கம் சொன்ன சீக்ரெட்!
சென்னை : ஈபிஎஸ் வராமல் போனால் போகட்டும், தொண்டர்கள் ஓபிஎஸ்ஸை தேடி வருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் வர உள்ளார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அணியில் இருந்த நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் தரப்பிற்குத் தாவியுள்ளனர்.
இதனால், ஓபிஎஸ் தரப்பின் பலம் கூடி வரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தங்கள் பக்கம் வர இருப்பதாக வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இருதரப்பும் இணைந்து செயல்பட்டு, பொதுக்குழுவை நடத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், மோதலும், அணி மாறல் நிகழ்வுகளும் இன்னும் தொடர்ந்து வருவது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆட்டம் ஆரம்பம்.. 'வேலையை காட்டும் தீர்ப்பு’ வீட்டுக்கு போனதுமே ஓபிஎஸ்-க்கு செம நியூஸ்.. ஈபிஎஸ் ஷாக்!
ஈபிஎஸ் சூழ்ச்சியை சொல்லவில்லை
இந்நிலையில் தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், "நேற்றைய ஓபிஎஸ் பேட்டி மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது. ஈபிஎஸ்ஸின் சூழ்ச்சிகளையும், நயவஞ்சகத்தையும் தெரிவிக்காமல், பெருந்தன்மையாக ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.. மனக் கசப்புகளை மறந்து செயல்படுவோம், அதிமுகவை வலுவான இயக்கமாக கொண்டு வருவோம் என முன்னிறுத்தி அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்.
தொண்டர்கள் ஏற்கவில்லை
அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிக்கையை மக்களும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்றைய தினமே ஈபிஎஸ் பக்கம் இருந்த வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஓபிஸ்ஸை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
இன்னும் ஒரே வாரத்தில்
இப்படி தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அதை நீங்கள் பார்ப்பீர்கள்.
ஈபிஎஸ் மேல்முறையீடு செய்திருக்கிறார். அந்த வழக்கை நாங்கள் சந்திப்போம். எங்கள் எண்ணம் கூட்டுத் தலைமை வேண்டும் என்பதுதான். அப்போதுதான் இந்த இயக்கம் வலுவானதாக இருக்க முடியும்.
சசிகலா, தினகரன்
ஓபிஎஸ், இந்த இயக்கம் வளர்வதற்கு பாடுபட்டவர்கள் அனைவரையும் வாருங்கள் என அழைத்திருக்கிறார். அதிமுகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் அழைத்துள்ளார். அவர்களை அழைக்கவில்லை, இவர்களை அழைக்கவில்லை என்ற பேதம் இல்லை. குறிப்பாக, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கும் இந்த அழைப்பு என்று சொல்லியிருக்கிறார்.
ஈபிஎஸ் கொடூர முகம்
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி முகம் எவ்வளவு கொடூரமாக இருந்தது. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்தைப் பார்த்திருப்பீர்கள். புன்சிரிப்பு தெரிந்தது. இதில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள். உள்ளத்தில் இருப்பதுதான் முகத்தில் தெரியும்.
லிஸ்ட் போடுங்க
ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். தலைமைக் கழகத்திற்குச் செல்வது அவரது உரிமை, கடமை. அலுவலகத்தில் எந்தெந்த ஆவணங்கள் திருட்டு போயுள்ளது என பட்டியலிட்டு அவர்கள் தெரிவிக்க வேண்டும். சும்மா குற்றச்சாட்டு சொல்லக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.