ஓபிஎஸ் எழுதிய கடிதம் தெரியாதா? அப்ப இபிஎஸ் என்ன நிலையில் இருக்கிறார் தெரியுமா?.. ஓபிஎஸ் தரப்பு நறுக்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை தெரியாது என கூறுவதிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமைக் கழகத்துடன் தொடர்பின்றி இருக்கிறார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் விமர்சித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு பூதாகரமாகியுள்ளது. ஒற்றை தலைமை தேவை என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் விடாபிடியாக இருக்கிறார்கள்.
ஆனால் ஓபிஎஸ் தரப்போ நல்லாதானே போய்கிட்டிருக்கு, எதுக்கு ஒற்றைத் தலைமை, இரட்டை தலைமையே தொடரட்டும் என்கிறார்கள். இதுவே பன்னீர் செல்வத்தின் கருத்தாகவும் இருக்கிறது.

ஒற்றைத் தலைமை
அதே வேளையில் ஒற்றைத் தலைமை என வந்தால் அது ஓபிஎஸ்தான் என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிடுகிறார்கள். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் தனித்தனியே 8ஆவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாளை மறுநாள் பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

அசாதாரண சூழல்
தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் தொண்டர்களின் நலன் கருதி பொதுக் குழு கூட்டத்தை வேறு தினத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் நேற்று முன் தினம் இரவு தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி கூறுகையில் ஓபிஎஸ் தரப்பினர் கொடுத்ததாக சொல்லப்படும் கடிதம் குறித்து தங்களுக்கு தெரியாது. பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என்றார்.

வைத்திலிங்கம் பதில்
இந்த நிலையில் இதுகுறித்து வைத்திலிங்கத்திடம் (ஓபிஎஸ் தரப்பு) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை தலைமை அலுவலகத்தில் இருக்கும் நிர்வாகி கையெழுத்திட்டு வாங்கியுள்ளார். கே பி முனுசாமி பேட்டி மூலம் அதிமுக தலைமைக் கழகத்துடன் இபிஎஸ் தொடர்பின்றி இருக்கிறார் என காட்டமாக விமர்சித்தார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications