வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடல்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை அருகே இயங்கி வந்த வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை அருகே இயங்கி வந்த வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வந்தது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில் மொத்தம் மூன்று அலகுகள் இருந்தது.

3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் என 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மிக சிறப்பாக இது இயங்கி வந்தது. தமிழகத்தின் மின் தேவையின் ஒரு பகுதியை இது பூர்த்தி செய்து வந்தது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் இந்த வல்லூர் அனல்மின் நிலையத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த அனல்மின் நிலையம் தனது சாம்பல் கழிவுகளை சதுப்பு நில பகுதிகளில் கொட்டுவதாக வழக்கு தொடுத்தார்.
இதனால் மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார். கடந்த சில வாரங்களாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வல்லூர் அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த தீர்ப்பில் வல்லூர் அனல்மின் நிலையம் சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வந்தது. இதற்கு அவர்கள் அனுமதி வாங்கவில்லை.
மத்திய அரசின் விதிகளை மீறி சாம்பலை கொட்டி வந்துள்ளனர். வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதி 2018 மார்ச்சுடன் முடிவடைந்தது. இதனால் இந்த நிலையத்தை மூட வேண்டும் என்று என்றுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொஞ்சம் மின்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications