14 ஆண்டுகள் ஆச்சு...உயிருடன் இருக்க சான்ஸே இல்லை.. இனி பிரபாகரனுக்கு வீரவணக்கம்.. திருமாவளவன்
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை; ஆகையால் பிரபாகரனுக்கும் இனி விடுதலை சிறுத்தைகள் கட்சி வீரவணக்கம் செலுத்தும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. அத்துடன் பிரபாகரன் உடல் என ஒன்றையும் அடையாளப்படுத்தியது. ஆனாலும் பிரபாகரன் மரணம் தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் கடந்த 14 ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

அண்மையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திடீரென பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; அவர் விரைவில் வெளியே வருவார் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார். மேலும் பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோர் ஐரோப்பிய நாடு ஒன்றில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழ்நாட்டு தலைவர்கள் பலரும் பிரபாகரன் உயிருடன் இருப்பது தொடர்பான முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
பொதுவாக பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஒரு சிலர் தவிர பிரபாகரன் உயிருடன் இல்லை; அவர் உயிருடன் இருந்திருந்தால் இப்படி பதுங்கி இருக்க மாட்டார்; பெற்ற மகன்களை போரில் இழந்துவிட்டு அவர் மட்டும் தப்பி ஓடி ஒளிந்து கொண்டிருக்க கோழை அல்ல என்கிற கருத்தையே முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் பிரபாகரன் இனி உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை; அவர் மரணம் அடைந்துவிட்டதாக கருதி இனி பிரபாகரனுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், நாங்கள் உட்பட அனைவருமே பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும்; உயிரோடு இருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் 14 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளோம். ஆனால் யதார்த்தத்தில், பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் தப்பிப் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும். அடுத்த ஆண்டு முதல் இதனை நாங்கள் பின்பற்றுவோம் என்றார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications