ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கும்! வேல்முருகன் திட்டவட்டம்!
ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவெடுத்துள்ள 3வது கட்சி
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இந்த முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக த.வா.க. தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 9ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்து கொண்ட விதம் அநாகரீகத்தின் உச்சம் என்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது. சனாதன சாக்கடையை சந்தனம் என்று வர்ணிப்பது, வள்ளுவத்தில் இருந்த ஆன்மீக கருத்துக்களை ஜி.யு.போப் நீர்த்துப் போகச் செய்துவிட்டார் என்று கூறுவது, தமிழ்நாடு என்ற பெயரையே ஏற்க மறுத்து தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என்று பேசுவது என இந்திய டெல்லி எஜமானார்களின் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்.

மக்களை இழிவுப்படுத்தி
பொங்கல் நாளில் ஆளுநர் அனுப்பிய அழைப்பில் தமிழ்நாடு என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டதோடு தமிழ்நாடு அரசின் இலச்சினையும் அகற்றப்பட்டு இருந்தது. அதைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் , தமிழ் உணர்வாளர்களும் கண்டனக் குரல் எழுப்பினர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிப்பது, நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது என 20க்கும் மேற்பட்ட சட்டமுன் வரைவுகளுக்கு ஒப்புதல் கொடுக்க மறுத்து தமிழ்நாட்டின் அரசையும், மக்களையும் இழிவுப்படுத்தி வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ் நோக்கம்
ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பெயர்களை உச்சரிக்க மறுத்தும், மாநில சுயாட்சி, சமூக நீதி போன்ற வார்த்தைகளை தவிர்த்தும், மரபுக்கு எதிராக, பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் நோக்கத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

விருந்து புறக்கணிப்பு
இன்னும் சொல்லப்போனால், ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அடியாளாக அவர் செயல்பட்டு வருகிறார். எனவே, குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது. ஆளுநரின் இந்த தேநீர் விருந்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications