பெரம்பூரில் தேர்தல் பரப்புரையை ரத்து செய்தார் விஜய்.. போலீஸ் அனுமதி வழங்கிய பின்னரும் திடீர் முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பரப்புரைகளை விஜய் ரத்து செய்வது புதிது கிடையாது. அந்த வகையில், இன்று அவர் பெரம்பூரில் மேற்கொள்ள இருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. காவல்துறை அனுமதி அளித்த நிலையிலும் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Vijay Perambur TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. பைக்கில் பின் தொடர்பவர்கள் கீழே விழுகிறார்கள். விஜய்க்காக மணிக்கணக்கில் வெயிலில் காத்திருந்து மயக்கமடைகிறார்கள். விஜய்யை எப்படியாவது பார்த்தே தீர்வது என்று ஆபத்தான ரிஸ்க் எடுக்கிறார்கள். இது விஜய்யின் பிரச்சாரம் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இப்படி இருக்கையில் பல இடங்களில் விஜய் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து ரத்து செய்து வருகிறார். இதற்கு முன்னர் வில்லிவாக்கம், தி.நகர் என பல இடங்களில் அனுமதி வழங்கியும் விஜய் தனது பரப்புரையை ரத்து செய்திருக்கிறார். இப்படி இருக்கையில், தற்போது தனது சொந்த தொகுதியான பெரம்பூரிலும் இன்று மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+