கொஞ்ச நஞ்ச மழையில்லை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை... அனுபவிக்க தயாராகுங்கள் மக்களே
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று சேலம், தருமபுரி,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர்,கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம் ,கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் முடிந்து பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை நேரங்களில் வானிலை மாறி இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் மாலை முதல் இரவு வரை பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. மதுரையில் அதிகபட்சமாக 13 செமீ மழை பதிவாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் 11 செமீ மழையும், பெரம்பலூர், கடலூரில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் 8 செமீ மழையும் திருச்சி, தஞ்சை, திருவையாறு, சேலத்தில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பவானிசாகர், கரூரில் 6 செமீ மழையும் விராலிமலையில் 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை
இன்று சேலம், தருமபுரி,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர்,கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம் ,கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல் மழை
ஜூலை 3ஆம் தேதியான நாளைய தினம் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ,வேலூர் ,கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை,திருப்பத்தூர்,கோயம்புத்தூர், ஈரோடு,விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
ஜூலை 4ஆம் தேதி சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் ,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
ஜூலை 5ஆம் தேதி வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆறாம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி,கோயம்புத்தூர், திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு அறிவிப்பு
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் வருகின்ற 4ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications