Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு வரவேற்பு - கீழடி புத்தகம் கொடுத்து வாழ்த்திய ஸ்டாலின்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர்கொத்து வழங்கினார். பின்னர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்ட கீழடி புத்தகத்தை பரிசாக அளித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்றார் . அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Welcome to Justice Munishwar nath bhandari - MK Stalin giving the Keeladi book

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரையின்படி இவர், தற்போது குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. அதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், இந்திய மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Welcome to Justice Munishwar nath bhandari - MK Stalin giving the Keeladi book

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கமலநாதன், பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் லூயிசால் ரமேஷ், லா சங்க தலைவர் செங்குட்டுவன் அகியோர் வரவேற்று பேசினர். வழக்குகளை விசாரிப்பதற்கும், நீதிபரிபாலனம் வழங்குவதிலும் முழு ஒத்துழைப்பு தருவதாக அனைவர் தரப்பிலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஏற்புரை ஆற்றிய தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, பாரம்பரியமிக்க நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக பதவியேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், 51 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார். பதவியேற்ற கடந்த 2 மாதங்களில் வழக்கறிஞர்கள், சக நீதிபதிகள் என அனைத்து தரப்பும் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும், வழக்குகளை விரைந்து முடிக்க அவை உதவியாக இருந்ததாகவும் குறிப்பிட்டு பேசினார்.வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கும், நீண்ட கால நிலுவை வழக்குகளை முடிப்பதற்கும் எப்போதும் தன்னை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.

Welcome to Justice Munishwar nath bhandari - MK Stalin giving the Keeladi book

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மலர்கொத்து வழங்கினார். பின்னர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்ட கீழடி புத்தகத்தை அளித்து வாழ்த்து கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+