தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு வரவேற்பு - கீழடி புத்தகம் கொடுத்து வாழ்த்திய ஸ்டாலின்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
சென்னை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர்கொத்து வழங்கினார். பின்னர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்ட கீழடி புத்தகத்தை பரிசாக அளித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்றார் . அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரையின்படி இவர், தற்போது குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. அதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், இந்திய மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கமலநாதன், பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் லூயிசால் ரமேஷ், லா சங்க தலைவர் செங்குட்டுவன் அகியோர் வரவேற்று பேசினர். வழக்குகளை விசாரிப்பதற்கும், நீதிபரிபாலனம் வழங்குவதிலும் முழு ஒத்துழைப்பு தருவதாக அனைவர் தரப்பிலும் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஏற்புரை ஆற்றிய தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, பாரம்பரியமிக்க நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக பதவியேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், 51 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார். பதவியேற்ற கடந்த 2 மாதங்களில் வழக்கறிஞர்கள், சக நீதிபதிகள் என அனைத்து தரப்பும் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும், வழக்குகளை விரைந்து முடிக்க அவை உதவியாக இருந்ததாகவும் குறிப்பிட்டு பேசினார்.வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கும், நீண்ட கால நிலுவை வழக்குகளை முடிப்பதற்கும் எப்போதும் தன்னை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மலர்கொத்து வழங்கினார். பின்னர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்ட கீழடி புத்தகத்தை அளித்து வாழ்த்து கூறினார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications