Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேய்பிறை செவ்வாய்...நவமி நாளில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் பாதிப்பா? ஜோதிடர்கள் சொல்வதென்ன

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை நேற்று திறக்கப்பட்டுள்ளது. தேய்பிறை செவ்வாய்க்கிழமையன்று நவமி நாளில் அணை திறக்கப்பட்டது சரியல்ல என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலத்தில் பெய்த கனமழையால் காவிரியில் பெருவெள்ளம் வரவே மேட்டூர் அணை மளமளவென நிரம்பியது. அணை நீர்மட்டம் 118 அடியை எட்டவே பாதுகாப்பு கருதி காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை திறக்கப்பட்ட நாள் நல்ல நாள் இல்லை என்றும் அதனால் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் ஜோதிடர்கள் கருத்து கூறியுள்ளனர்.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. 24.05.2022 நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும் நீர் இருப்பு 89.942 டிஎம்சி அடியாகவும் உள்ளது.

நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே. காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார்.

நவமி திதி நல்ல நாளா?

நவமி திதி நல்ல நாளா?

மேட்டூர் அணை திறக்கப்பட்ட நாள் தேய்பிறை செவ்வாய்க்கிழமை நவமி திதியாகும். பொதுவாகவே எந்த ஒரு நல்ல காரியத்தையும் அஷ்டமி நவமி திதியில் தொடங்க மாட்டார்கள். அதுவும் மூன்று போகம் விளையக்கூடிய காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட அணையை செவ்வாய்க்கிழமை நாளில் நவமி திதியில் திறந்திருக்கக் கூடாது என்றும் அதனால் விவசாயம் பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

Recommended Video

    பல வருடங்களுக்கு பின் கோடையில் Mettur Dam திறப்பு- CM Stalin இன்று திறந்து வைத்தார்
    ஜோதிட ஆலோசனை

    ஜோதிட ஆலோசனை

    முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தலின் போது வேட்பாளர்களை அறிவித்தது முதல் வேட்பு மனு தாக்கல் செய்தது, பதவி ஏற்றுக்கொண்டது என எல்லாமே நல்ல நாள் பார்த்து ஜோதிட ஆலோசனை பெற்றே செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அணை திறப்பு குறித்து திடீரென நாள் கிழமை பார்க்காமல் முடிவெடுத்தது ஏன் என்றும் ஜோதிடர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    சிம்ம ராசிக்கு அஷ்டம குரு

    சிம்ம ராசிக்கு அஷ்டம குரு

    சிம்ம ராசிக்காரர் ஸ்டாலின் பதவியேற்ற போது குருவின் ஆசியும், சனிபகவானின் ஆசியும் கிடைத்தது. அதுவே வெற்றிகளை குவிக்க காரணமாக இருந்தது. இப்போது குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்கிறார். இது அஷ்டம குரு என்பதால் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். சனிபகவானின் சஞ்சாரமும் சாதகமில்லை என்பதால் எந்த ஒரு காரியத்தையும் அவசர கதியில் செய்யக்கூடாது என்பதும் ஜோதிடர்கள் கருத்தாகும்.

    விவசாயம் பாதிக்குமா?

    விவசாயம் பாதிக்குமா?

    நாட்டின் மன்னர்களோ, தலைவர்களோ நல்ல காரியங்களை தொடங்கும் போது நல்ல நாள், திதி, ஹோரை பார்த்துதான் தொடங்குவார்கள். ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள். தமிழக முதல்வரோ மாநிலத்திற்கு சுபிட்சத்தை தரக்கூடிய விவசாய பணிக்கு தண்ணீர் திறந்து விடும் போது நல்ல நாள் பார்க்காமல் திறந்து விட்டு விட்டதாகவும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

    இயற்கையின் ஆசி

    இயற்கையின் ஆசி

    திமுக அரசுக்கு இயற்கையின் ஆசி உள்ளதால்தான் முன்கூட்டியே மேட்டூர் அணை நிரம்பியது என்று பெருமையுடன் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தேர்தல் அறிக்கையில் கொடுக்காத வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நெல் சாகுபடியில் சாதனை படைக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டும் விவசாயிகள் நலனுக்காக முன்கூட்டியே அணை திறக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அணை திறக்கப்பட்ட நாள் சரியில்லை என்று ஜோதிடர்கள் கூறியிருந்தாலும் இறைவனின் ஆசியும் இயற்கையின் ஆசியும் இருந்தால் மழை வளம் சிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+