Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஊதிய உயர்வு.. யாருக்கு எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் எவ்வளவு ஊதிய உயர்வு பெறுவார்கள் என்பதை காணலாம்.

தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவெறியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,012-லிருந்து அதிகபட்சமாக ரூ.7,981 வரை உயர்த்தப்படும். அதேபோல் நடத்துநர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,965ல் இருந்து ரூ.6,640 வரை நிர்ணயம் செய்யப்படும்.

 what is the Salary for Government Bus Drivers and Conductors after the Hike

பயணச்சீட்டு பரிசோதனை அதிகாரிகளுக்கு ரூ.4,692 முதல் ரூ. 7,916 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். அதேபோல் தொழிற்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.9,329 வரையிலும், தொழிற்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூ.8,476 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அலுவலக பணியாளர்களுக்கு ரூ.6,640 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

இதுமட்டுமல்லாமல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், 34க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒப்பந்த்த்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளன. அதே போல இந்த ஒப்பந்தத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் உள்ளிட்டு 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் கையெழுத்திடவில்லை.

முன்னதாக 8 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்திற்கான 7வது கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் வெளிநடப்பு செய்தன.

இதனைத்தொடர்ந்து சிஐடியு அ.செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பேச்சுவார்த்தையில் உள்ள ஒவ்வொரு அம்சத்திலும் சிஐடியு உழைப்பு பங்களிப்பு உள்ளது. 90 சதவிகிதம் அரசின் ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளோம்.

ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தவும், கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற 21 வேலை நிறுத்த நாட்களை பணி நாளாக மாற்றி ஊதியம் வழங்க மறுத்ததை கண்டித்தும் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 4 ஆண்டாக உயர்த்தப்பட்டது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தற்போதைய நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மட்டுமின்றி பல்வேறு துறைகளுக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+