எதிர்ப்பை மீறி எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டால்.. ஓபிஎஸ் வகுத்த பலே திட்டம்!
சென்னை: ஒரு வேளை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக கடும் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டால் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சசிகலா ஆதரவுடன் கட்சியை கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுகிறது.
அதிமுகவில் இரு பெரும் தலைவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் தற்போது முக்கிய பதவிக்கு நேருக்கு நேர் சண்டையிட்டு கொள்ளும் நிலை வந்துள்ளது.

யார் எதிர்க்கட்சித் தலைவர்
அதாவது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காரை நிறுத்துமிடத்திலிருந்தே சண்டைகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் காரை முன் பகுதியில் நிறுத்த முயற்சித்த போது அங்கு முதலில் வந்த எடப்பாடியின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்
இதனால் இரு ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் பன்னீர்செல்வமும் எடப்பாடியாரும் தனியே ஆலோசனை நடத்தியதில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவருமே விட்டுத் தர தயாராக இல்லை என்றே தெரிகிறது.

16 எம்எல்ஏக்கள்
எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர் செல்வம் தேர்வாக வேண்டும் என 16 எம்எல்ஏக்கள் விரும்புகிறார்களாம். அப்படியென்றால் எடப்பாடிக்கு ஆதரவு அதிகம் என்பது அர்த்தம். முதல்வர் வேட்பாளர் யார் என்ற தேர்விலேயே எடப்பாடிக்கு ஓபிஎஸ் விட்டுக் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறார் ஓபிஎஸ்.

தீவிரம்
ஒரு வேளை நாளை நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை விட்டு வெளியேறுவார் என தெரிகிறது. அவ்வாறு வெளியேறும் அவர் சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவார் என்றே தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications