எதிர்ப்பை மீறி எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டால்.. ஓபிஎஸ் வகுத்த பலே திட்டம்!
சென்னை: ஒரு வேளை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக கடும் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டால் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சசிகலா ஆதரவுடன் கட்சியை கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுகிறது.
அதிமுகவில் இரு பெரும் தலைவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் தற்போது முக்கிய பதவிக்கு நேருக்கு நேர் சண்டையிட்டு கொள்ளும் நிலை வந்துள்ளது.

யார் எதிர்க்கட்சித் தலைவர்
அதாவது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காரை நிறுத்துமிடத்திலிருந்தே சண்டைகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் காரை முன் பகுதியில் நிறுத்த முயற்சித்த போது அங்கு முதலில் வந்த எடப்பாடியின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்
இதனால் இரு ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் பன்னீர்செல்வமும் எடப்பாடியாரும் தனியே ஆலோசனை நடத்தியதில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவருமே விட்டுத் தர தயாராக இல்லை என்றே தெரிகிறது.

16 எம்எல்ஏக்கள்
எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர் செல்வம் தேர்வாக வேண்டும் என 16 எம்எல்ஏக்கள் விரும்புகிறார்களாம். அப்படியென்றால் எடப்பாடிக்கு ஆதரவு அதிகம் என்பது அர்த்தம். முதல்வர் வேட்பாளர் யார் என்ற தேர்விலேயே எடப்பாடிக்கு ஓபிஎஸ் விட்டுக் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறார் ஓபிஎஸ்.

தீவிரம்
ஒரு வேளை நாளை நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை விட்டு வெளியேறுவார் என தெரிகிறது. அவ்வாறு வெளியேறும் அவர் சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவார் என்றே தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications