சின்மயி அம்பலப்படுத்திய மகரிஷி, செட்டிநாடு, சாந்தோம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எப்போது?
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளியில் பாலியல் புகாருக்குள்ளான ஆசிரியர் ராஜகோபால் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது போல, பாடகி சின்மயி அம்பலப்படுத்திய மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா, சாந்தோம் உயர்நிலை பள்ளி உள்ளிட்டவற்றில் பாலியல் புகாருக்குள்ளான ஆசிரியர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இலை மறைவாக காய் மறைவாக இருந்து வந்த பாலியல் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. அரசு அலுவலகங்கள், சினிமா துறை, ஐடி துறை, தனியார் அலுவலகங்கள், விளையாட்டு, ஊடகத் துறை என பாலியல் அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன.
தற்போது பள்ளி, கல்லூரிகளிலும் இது போன்ற பாலியல் அத்துமீறல்கள் தற்போது பத்ம சேஷாத்ரி மூலம் வெளி வருகிறது. சென்னை கே கே நகரில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறை துணை ஆணையரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

விசாரணை
இதையடுத்து ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பத்ம சேஷாத்ரி பள்ளியை பொருத்தமட்டில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது. அந்த பள்ளியில் உள்ள மேலும் சில கருப்பு ஆடுகள் சிக்குவார்கள் என தெரிகிறது.

மகரிஷி பள்ளி
இந்த நிலையில், பத்மசேஷாத்ரி பள்ளி போலவே, மகரிஷி வித்யா மந்திர், செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பாடகி சின்மயி மாணவிகளின் புகாருடன் அம்பலப்படுத்தியுள்ளார். அது போல் தடகள பயிற்சியாளர் நாகராஜன் படுக்கை அறைக்கே மாணவிகளை அழைக்கும் அளவுக்கு சென்றுவிட்டார்.

செல்போன் எண்
அதுபோல் துணை ஆணையரின் செல்போன் எண்ணிற்கு 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்வி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த பள்ளிகள், கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தி புகார்களில் உண்மைத்தன்மை இருப்பின் அவர்கள் மீதும் அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

100 சதவீதம்
ஆசிரியர் என்பவர் பெற்றோர் ஸ்தானம் என்பது மாறி தகப்பன் என்ற போர்வையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்யும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது போல் இந்த ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சியை கொடுப்பதால் அவர்கள் மீது வந்த பாலியல் புகார்களை கண்டும் காணாமல் இருந்த பள்ளி நிர்வாகம், முதல்வர் உள்ளிட்டோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்புலம்
தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இனி தவறு செய்ய தோன்றும் ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எனவே சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகார்கள் மீது போலீஸார் தாமாக முன் வந்து, அதாவது மாணவிகள் முறையாக புகார் அளிக்கும் வரை காத்திருக்காமல் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி உண்மையும் ஆதாரமும் இருப்பின் எந்தப் பள்ளி, எந்த பின்புலம் என்று பார்க்காமல், பாரபட்சமே இல்லாமல் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து பெற்றோரின் வயிற்றில் பாலை வார்க்க வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications