முடித்துக்கட்ட எடப்பாடி 'சிக்னல்'.. பாஜக கோபப் பார்வை..? “ஈபிஎஸ் ஆடும் கேம்”.. குபேந்திரன் ‘பளிச்’!
சென்னை : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். அதிமுகவை சீண்டி வரும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதன் வெளிப்பாடாகவே அதிமுக தலைவர்கள் அண்ணாமலையையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்" என ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் இரு தரப்பு மோதலுக்கு மத்தியில் ஓபிஎஸ் தரப்பினர், பாஜக தலைமையோடு மிகவும் இணக்கமாக இருந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பாஜகவிற்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக விவகாரம் மற்றும், பாஜக தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கும் முடிவு பற்றி பத்திரிகையாளர் குபேந்திரன் நமது ஒன் இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

உக்கிரமான போட்டி
அதிமுகவைக் கைப்பற்றும் போட்டியில் உக்கிரமாக ஈடுபட்டு வரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் அடுத்தடுத்த நகர்வுகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி வரும் 27ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, ஓபிஎஸ், கட்சி பெயர், கொடியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஈபிஎஸ். தேர்தல் ஆணையம், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படி, அதிமுகவில் பரபரப்புகள் தொடர்ந்து வருகின்றன.

அறிவுஜீவி கொடுத்த ஐடியா
இந்நிலையில் இதன் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என பத்திரிகையாளர் குபேந்திரனிடம் ஒன் இந்தியா சார்பில் கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர், "ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே உச்ச நீதிமன்றத்தில் மாறி மாறி மனு தாக்கல் செய்து வந்தனர், இந்த சூழலில் யாரோ ஓர் அறிவுஜீவி ஓபிஎஸ்ஸுக்கு ஐடியா கொடுத்துள்ளார். மாறி மாறி மனு தாக்கல் செய்வதால் என்ன பலன்? ஏதாவது கூட்டம் நடத்தி, ஆவணங்களை தயார் செய்து கொள்ளுங்கள் என ஐடியா கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் தான் ஓபிஎஸ் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். 88 மா.செக்களை நியமித்து, அவர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார்.

ஓபிஎஸ் நிலைமை பரிதாபம்
இதை நீதிமன்றத்தில் ஓபிஎஸ் முன்வைக்கலாம். எனது அணியில் நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இவ்வளவு பேர் கலந்து கொண்டிருக்கின்றனர் என ஓபிஎஸ் தரப்பு வாதாடலாம். அதற்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமியும் மா.செக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கட்சியே தனது பக்கம் இருப்பதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதற்றப்பட்டிருக்க வேண்டியதில்லை. இந்த மா.செக்கள் கூட்டத்தால் இரு தரப்புக்குமே நீதிமன்றத்தில் எந்தவொரு பெரிய பலனும் கிடைக்கப்போவதில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் தான் கட்சி இருக்கிறது. ஓபிஎஸ் நிலைமை பரிதாபம்" எனத் தெரிவித்துள்ளார்.

பின்னணியில் ஈபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி அணியில், பாஜகவை எதிர்த்து பல்வேறு குரல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜகவிற்கு எதிராகப் பேசி வருவதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது பற்றி ஒன் இந்தியா செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பத்திரிகையாளர் குபேந்திரன், இதற்குப் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக + பாஜக கூட்டணி அமையும் எனப் பேசுகிறார். மறுநாளே ஜெயக்குமார், அவர் சொன்னது சரிதான் என்பதைப் போல பேசுகிறார்.

அண்ணாமலை யார்
செல்லூர் ராஜூ, காவி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று பேசுகிறார். எம்.ஜி.ஆருக்கு காவி துண்டு போட்டதை கண்டித்த அவர், காவி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும் என அழுத்திக் கூறி இருக்கிறார். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.பி திருத்தணி கோ. ஹரி, பாஜகவின் 4 எம்.எல்.ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை எனப் பேசியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், எங்கள் கட்சி தலைவர்களுக்கு ரேங்க் போடுவதற்கு இந்த அண்ணாமலை யார்? என்று பேசுகிறார்.

எடப்பாடி - பேசாத காரணம்
அதிமுகவின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் பலரும், பாஜகவுக்கு எதிராகப் பேசுகிறார்கள். இது எல்லாமே எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி நேரடியாக பாஜகவை விமர்சித்துப் பேசாததற்குக் காரணம் இருக்கிறது. இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜகவை விமர்சிப்பதால், பாஜக கோபப்பட்டு, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளே இறக்கப்பட்டால், பாஜகவுடன் சமாதானமாகச் செல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. கட்சிக்காரர்கள் தன்னிச்சையாக அப்படி பேசிவிட்டார்கள் என சமாளிக்கலாம். ஆனால், இந்த விஷயங்களை எடப்பாடியே பேசிவிட்டால் அப்புறம், பாஜகவுடன் சமாதானத்திற்குச் செல்ல முடியாது.

ஈபிஎஸ் எடுத்த முடிவு
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். பாஜக என்ற சுமையை இறக்கி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பலரும் விரும்புகிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கு வராது என்று கருதுகிறார்கள். கடந்த பல மாதங்களாகவே அதிமுகவை சீண்டி வருகிறார் அண்ணாமலை. அதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவில் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் அதிமுக தலைவர்கள் பேசி வருவது" எனத் தெரிவித்துள்ளார்.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்











Click it and Unblock the Notifications