சந்திரயான் 3.. இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் இதை கவனிச்சீங்களா? ஆஹா! இந்தியாவை வியந்து பார்த்த உலகம்!
சென்னை: சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் இன்று காணப்பட்ட காட்சி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
நிலாவை ஆராய்ச்சி செய்யும் திட்டம்தான் இந்தியாவின் சந்திரயான் திட்டம். இந்த திட்டத்தின் முதல் பகுதி சந்திரயான் 1 மூலம் நிலவில் இருக்கும் நீரை இந்தியா கண்டுபிடித்தது. அதன்பின் சந்திரயான் 2 திட்டத்தை இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது.

நிலவை ஆய்வு செய்யும் பொருட்டு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து நிலவில் ஆய்வு செய்யும் முடிவை கைவிடாமல் சந்திரயான் 3 திட்டத்தை நிலவிற்கு இந்தியா அனுப்பியது.
இந்த சந்திரயான் 3 திட்டத்திற்கும் 2 திட்டத்திற்கும் இடையில் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆர்பிட்டர் இல்லை: சந்திரயான்-2வில் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை இருந்தது. அதேசமயம் சந்திரயான்-3 ஆர்பிட்டர் இல்லை. இதில் ஒரு லேண்டர்(LM), ப்ராபல்ஷன் மாட்யூல் (PM) மற்றும் ஒரு ரோவர் ஆகியவை உள்ளது.
இதில் சந்திரயான் 2 ஆர்பிட்டர் என்பது நிலவை சுற்றி ஆய்வு செய்யும். ஆனால் சந்திரயான் 3ல் ப்ரோபல்ஷன் மாடுல் அப்படி இல்லை. இது சந்திராயன் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திராயன் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படும் சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல்.

இணைப்பு: இப்போது சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் இன்னும் செயலில்தான் உள்ளது. 4 வருடமாக இது இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இதனுடன்தான் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் இணைப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்னும் சற்று நேரத்தில் நிலவில் தரையிறங்க உள்ளது.
இதற்கான செயல்பாடுகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் தொடங்கி உள்ளது. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் இன்று காணப்பட்ட காட்சி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அதன்படியே அறையில் அதிக அளவில் பெண் என்ஜினியர்கள் அமர்ந்து இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. சாதாரண எளிமையான புடவையில், பெரிய ஆர்ப்பாட்டம் இன்றி பெண்என்ஜினியர்கள் அமர்ந்து இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது போன்ற பெரிய மேடையில் பெண்கள் பலர் பங்கேற்று இருப்பது இந்தியாவின் பாலின சமத்துவத்துவதையும், பெண்களின் முன்னேற்றத்தையும் உலக நாடுகளுக்கு முன்னிறுத்துவதாக உள்ளது.
பாதிக்கு பாதி பெண்கள் அங்கே அமர்ந்து இருந்த காட்சி பெண்களின் அறிவியல் ரீதியான முன்னேற்றத்தை உணர்த்தும் விதமாக அமைந்து உள்ளது. முக்கியமாக உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா குறித்த புதிய இமேஜை கொடுக்கும் காட்சியாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications