தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா? தேர்தல் ஆணையம் அதிரடி பதில்
சென்னை: முன்கூட்டியே தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறுமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக ஏப்ரல் 3வது வாரத்தில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை வைத்திருந்தது. அத்துடன் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி உமேஷ் சின்ஹா தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சட்டசபை தேர்தல்
இந்த கூட்டத்தில் தமிழத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. ஆலோசனைக்கு பின்னர் லோக்சபா தேர்தல், வாக்குப் பதிவு விவரங்கள் உள்ளிட்டவை அடங்கிய குறிப்பேடு வெளியிடப்பட்டது.

தேர்தல் அதிகாரி பதில்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறுகையில், முன்கூட்டியே தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறுமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது. 80 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளிக்கலாம்.

சாய்தள வசதி உறுதி
ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடியில் சாய்வு தளம், கழிவறை மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்படுவார்கள்:

தீவிரமாக கண்காணிப்போம்
அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மரபுப்படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்: தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாக கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும்" என்று தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறினார்.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications