Tamilnadu Lockdown: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்தா.. முக்கிய முடிவு எடுக்கும் அரசு?
சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு குறித்து ஒரு முக்கிய முடிவை தமிழக அரசு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலானது.
இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதே போல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அங்கு சனி, ஞாயிறு இரு தினங்களும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

குறைவு
இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று குறைந்ததாலும் வணிகர்கள் கேட்டுக் கொண்டதாலும் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதே போல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

31 ஆம் தேதி கட்டுப்பாடுகள்
அதாவது கொரோனா தொற்று குறைந்தால் வார இறுதி ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் குறைந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்றன.

என்ன ஆலோசனை
இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை மேலும் கடுமையாக்குவதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
Recommended Video

முழு ஊரடங்கு
மேலும் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கடுமையான கட்டுப்பாடுகள் வாய்ப்பில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் தமிழகத்தில் ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பரவி வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அரசு என்ன முடிவை அறிவிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications