23 மணி நேர அனுமதி.. காய்ச்சல் மாத்திரை, அரிசி கஞ்சி.. 24 ஆயிரம் பில் தீட்டிய தனியார் மருத்துவமனை
கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு 23 மணி நேர சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 23 மணி நேரத்தில் வெறும் அரிசி கஞ்சி கொடுத்துவிட்டு அதன் விலை ரூ 1,380 என ரசீதில் போட்டிருந்தது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியான சம்பவம் ஆகும்.
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையின் தீவிரத்தால் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிக்கு இடம் கிடைக்காதவர்கள் தனியார் மருத்துவமனையை நாடுகிறார்கள்.
ஆனால் அங்கு கட்டணக் கொள்ளை நடத்துவது ஒரு சில மாநிலங்களில் முறைப்படுத்தவில்லை. அது போல் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இல்லத்தரசி ஒருவர் அங்கு கொடுக்கப்பட்ட கட்டண ரசீதை கண்டு அதிர்ந்தே போய்விட்டார்.

ஷபீனா
கொச்சியில் வடுதலாவை சேர்ந்தவர் ஷபீனா சாஜு. இவருக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் ஆளுவா அன்வர் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா சிகிச்சை
இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்றாகும். இங்கு 50 ஆயிரம் முன்பணம் கட்ட தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மணி நேரம் ஆகியும் ஷபீனாவை கண்டுகொள்வார் யாரும் இல்லை.

வெறும் காய்ச்சல்
அவர் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு வெறும் காய்ச்சலுக்கான மாத்திரையும் அரிசி கஞ்சியும் மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு மருத்துவர் கூட அவரை வந்து பார்க்கவில்லை. உடனே தனது உறவினர்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தினார். இதையடுத்து ஷபீனாவை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்தனர்.

ஷபீனா டிஸ்சார்ஜ்
மருத்துவமனை பில்லை செலுத்தியவுடன் ஷபீனா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளித்த சிகிச்சையால் பூரண குணமடைந்த ஷபீனா எத்தேச்சையாக பழைய மருத்துவ ரசீதை எடுத்து பார்த்தார். அதை பார்த்த அவர் அதிர்ந்தார்.
Recommended Video

ஷபீனா
23 மணி நேரம் மட்டுமே இருந்த ஷபீனாவுக்கு ரூ 24,760ஐ கட்டணமாக செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அந்த பில்லில் பிரேக்கப்பை பார்த்த போது பாதுகாப்பு கவச உடைகளுக்கு ரூ 10,416 போடப்பட்டுள்ளது. வெறும் அரிசி கஞ்சியே கொடுக்கப்பட்ட நிலையில் உணவு என போட்டு ரூ 1,380 போடப்பட்டது. காய்ச்சல் மருந்துக்கு ரூ 24 போடப்பட்டிருந்தது.

திருப்பி தந்த மருத்துவமனை
இதனிடையே வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அந்த பணத்தை உறவினர்கள் செலுத்தியுள்ளனர். இந்த ரசீதை வைத்துக் கொண்டு ஷபீனா தரப்பு புகார் கொடுக்க இருந்தது. உடனே மருத்துவமனை நிர்வாகம் அவரை அழைத்து பேசி கட்டிய பணத்தை நேற்று இரவு திருப்பி கொடுத்தனர்.
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications