கோவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட.. பெண் காவலர் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!
கோவை: கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவலர் ஆய்வாளர் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கலையரசி, இவர், மாவட்ட குற்றப்பிரிவு பொருளாதார பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்தார். பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ளார்..
இவர் நிதி நிறுவன மோசடி வழக்கில், அதன் உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், பொது மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

பணியிடை நீக்கம்
இதனை தொடர்ந்து கோவை சரக டிஐஜி முத்துசாமி, கலையரசியை பணியிடை நீக்கம் செய்தார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து பெண் போலீஸ் கலையரசி மிகுந்த விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சக போலீஸ்காரர்களிடமும் புலம்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன விரக்தியில் இருந்த பெண் போலீஸ் கலையரசி மண்ணெண்ணய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

தற்கொலை முயற்சி
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பெண் போலீஸ் கலையரசியை உடனடியாக காப்பாற்றினார்கள். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக, ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் கலையரசி திடீரென ஏன் தற்கொலைக்கு முயன்றார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் நிதி நிறுவன உரிமையாளர்கள் தரப்பில் இருந்து ஏதும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்கொலை முயற்சி
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பெண் போலீஸ் கலையரசியை உடனடியாக காப்பாற்றினார்கள். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக, ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் கலையரசி திடீரென ஏன் தற்கொலைக்கு முயன்றார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் நிதி நிறுவன உரிமையாளர்கள் தரப்பில் இருந்து ஏதும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு
கோவையில் கடந்த சில நாட்களாகவே அடிதடி, தகராறு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குற்றங்கள் தொடர்பாக, ஏராளமான மக்கள் கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்தது வருகின்றனர். ஆனால் பெண் போலீஸ் கலையரசி போல் இருக்கும் அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications