Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேட்டுப்பாளையத்தில் அசைவேயில்லை.. 2 நாளாக ஒரே இடத்தில் அதே உருவம்.. கோவையை இப்படி பயமுறுத்திடுச்சே

Subscribe to Oneindia Tamil

கோவை: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 2 இடத்தில் நடந்த சம்பவத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பாம்புகளிலேயே அதிக விஷத்தன்மை கொண்டது ஆப்பிரிக்காவில் காணப்படும் கோப்ரா வகை... அதேபோல, அதிக விஷம் கொண்ட பாம்பாக காணப்படுவது ராஜநாகம்.
கொடிய விஷயம்: தமிழகத்தின் ஒருசில பகுதியில் இவை வாழ்ந்து வருகின்றன... இந்த ராஜ நாகங்கள் அதிக விஷத்தை செலுத்தக்கூடியது.. ஒரே நேரத்தில் 11 பேரை கொல்லும் அளவுக்கு விஷம் வைத்திருக்குமாம். இப்படிப்பட்ட ராஜநாகம், நேற்றைய தினம், வெவ்வேறு இடங்களில் பொதுமக்களை பதறவைத்துவிட்டன.

Kovai Coimbatore Mettupalayam

கர்நாடகாவின் அகும்பே பகுதி மழைக்காடுகள் நிறைந்த செழுமையான இடமாகும்.. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டது. அங்கிருந்த வீட்டை ஒட்டிய புதரில் புகுந்து, மரத்தின் மீது அந்த பாம்பு ஏறிவிட்டது. இதைப்பார்த்ததுமே அங்கிருந்த மக்கள் பதறிப்போய்விட்டார்கள்.. மரத்திலிருந்து எப்போது இறங்கிவிடுமே என்று கலங்கிநின்றனர்.

சீற்றம்: அதற்குள் தகவலறிந்து மழைக்காடு ஆராய்ச்சி நிலைய பாம்பு பிடி வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார்கள்.. மரத்தில் நின்ற பாம்பை உடனடியாக கீழே இறக்க முயன்றனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. காரணம், அந்த நீளமாக இருந்திருக்கிறது.. அத்துடன் பயங்கரமாக சீறிக் கொண்டே இருந்திருக்கிறது. எனவே, பாம்பின் வாலை பிடித்து மரத்தில் இருந்து கீழே இறக்கியிருக்கிறார்கள்.

பாம்பு பிடி வீரர்கள், இவர்களுடன் பெண் வன அதிகாரி என அனைவரும் சேர்ந்து, இந்த பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றனர்.. இதற்காக அங்கிருந்த சுவற்றில், பாம்பு பிடிக்கும் பையை வைத்து, அதன் வாய்ப்பகுதியில் ஒரு குழாயை கட்டி, பொந்து போல ஏற்பாடு செய்தார்கள்.. அதற்கு பிறகு, கீழே இறக்கப்பட்ட பாம்பு திடீரென ஓடத்துவங்கும்போது, பாம்பு பிடிக்கும் வீரர் லாலவகமாக குச்சியால் அதை சுவர் பக்கமாக திருப்பிவிட்டார்கள்.. அந்த பாம்பு, பொந்து என நினைத்து பைக்குள் விழுந்துவிட்டது.

பாதுகாப்பு: பின்னர் அதை மூட்டை கட்டிய அதிகாரிகள் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டுசென்றனர்.. இறுதியாக பாம்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விடைபெற்றனர். இதுபற்றிய வீடியோவை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதேபோல, கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையிலும் ஒருசம்பவம் நேற்று நடந்துவிட்டது.. வனச்சரக பகுதியை ஒட்டியுள்ளது பாலப்பட்டி என்ற கிராமம்,.

Kovai Coimbatore Mettupalayam

என்ன காரணம்: இந்த கிராமத்துக்குள், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ராஜநாகம் ஒன்று 2 நாட்களுக்கு முன்பு புகுந்துவிட்டது. 2 நாட்களாகவே ஒரே இடத்தில் படுத்து கிடக்கிறதாம்.. எங்கேயுமே நகராமல், அசைவின்றி ஒரே இடத்தில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்துவந்து, புதருக்குள் பதுங்கி இருந்த ராஜநாகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பாம்பு பிடி வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடித்தான் அந்த ராஜநாகத்தை மீட்டு வெளியே எடுத்து வந்தனர். அந்த ராஜநாகம் சுமார் 12 அடி நீளம் இருந்துள்ளது... அந்த பாம்பின் உடல்நிலை பற்றி வனத்துறையினர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

சோர்வு: அப்போதுதான், அந்த பாம்புவால் எதுவுமே சாப்பிட முடியாத நிலைமையில் இருந்திருப்பதை கண்டறிந்தனர்.. சோர்வான நிலையிலேயே பாம்பு இருந்திருக்கிறது. அதனால்தான், எங்குமே ஊர்ந்து செல்லமுடியாமல், ஒரே இடத்தில் அசைவின்றி கிடந்ததாக சொல்கிறார்கள். அதற்கு பிறகு, மீட்கப்பட்ட ராஜநாகம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டுபோய் விடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+