Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாப் கியருக்கு போகும் கோவை.. சரவணம்பட்டி இனி மொத்தமாக மாற போகுது.. இது நடந்தால் அசுர வளர்ச்சி தான்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் எந்தளவுக்குப் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பது கோவை மக்கள் அனைவருக்குமே தெரியும். இதற்கிடையே சரவணம்பட்டி பகுதியில் டிராபிக்கை குறைக்கத் தமிழக அரசு எடுக்கும் முக்கிய நடவடிக்கை குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சென்னைக்குப் பிறகு முக்கியமான நகரம் என்றால் அது கோவை தான். இதன் காரணமாகவே வந்தே பாரத் தொடங்கிப் பல முக்கிய திட்டங்கள் முதலில் கோவைக்கு வருகிறது.

Coimbatore traffic

அதேநேரம் சென்னைக்கு இணையாகக் கோவையில் பொது போக்குவரத்து எதுவும் இல்லை. தற்போது வரை கோவையில் பேருந்துகள் மட்டுமே பொது போக்குவரத்தாக இருந்து வருகிறது..

கோவை டிராபிக்

குறிப்பாக சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டிராபிக் உச்சத்தில் இருக்கும். மாலை நேரங்களில் ஆபீஸ் சென்று திரும்புவோர் டிராபிக்கில் சிக்கிச் சிதறிவிடுவார்கள். ஒட்டுமொத்த கோவை மக்களுக்கும் டிராபிக் என்பது எவ்வளவு மோசமான சிக்கலாக இருக்கிறது என்பது தெரியும். நீங்கள் மாலை நேரங்களில் சும்மா மேப்பை ஓபன் செய்து பார்த்தாலே அது பெரும்பாலும் சிவப்பு கலரில் தான் இருக்கும். அந்தளவுக்குக் கோவையில் டிராபிக் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

சரவணம்பட்டி டிராபிக்

இதையடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அங்கு மேம்பாலத்தைக் கட்ட கடந்த 2023ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு இந்த மேம்பாலத்தைக் கட்ட திட்டமிட்டது.. அதேநேரம் தற்போது முன்மொழியப்பட்டுள்ள கோவை மெட்ரோ ரயில் பாதை இந்த சரவணம்பட்டி வழியாகவே செல்லும் வகையில் உள்ளது.

இதனால் மெட்ரோ திட்டம் இறுதியாவதற்கு முன்பு மேம்பாலத்தைக் கட்டினால் மீண்டும் மெட்ரோ பணிகளுக்கு அதை இடிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு மேம்பாலப் பணிகள் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சரவணம்பட்டியில் இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக்க சிஎம்ஆர்எல் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை அடுக்கு மேம்பாலம்

இதுபோல ஒரே நேரத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டுவது என்பது பல வகைகளில் உதவியாகவே இருக்கும். இது இரண்டு உள்கட்டமைப்பு திட்டங்களையும் தடையின்றி ஒருங்கிணைக்க அனுமதிக்கும். மேலும், நிலம் கையகப்படுத்துதல் தொடங்கி செலவுகளையும் கூட கணிசமாகக் குறைக்கும்.

திட்டம் என்ன

தற்போது போடப்பட்டுள்ள திட்டத்தின்படி சரவணம்பட்டியில் டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்கப்படும். அதில் மேல் மட்டத்தில் மெட்ரோ ரயில் செல்லும். கீழ் மட்டத்தில் வாகனங்கள் செல்லும். இந்த திட்டத்தை சிஎம்ஆர்எல் அமைப்பு தான் மேற்கொள்ளும். இந்த இரட்டை அடுக்கு மேம்பாலத்திற்கான தூண்களை முதலில் சிஎம்ஆர்எல் நிறுவும். பிறகு சாலை அமைக்கும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்பார்வையிடும். அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு மெட்ரோ ரயில் நிர்வாகம் வழக்கம் போல மேலே மெட்ரோ பணிகளை மேற்கொள்ளும்.

இந்த திட்டத்திற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் முழுமையாக முடிந்தால் அது சரவணம்பட்டியில் நிலவும் டிராபிக்கை வெகுவாக குறைக்கும் என்றே வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அத்துடன் மெட்ரோவும் செயல்பாட்டிற்கு வரும் போது டிராபிக் பிரச்சினை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+