ரஜினியை சீரியசாக எடுக்க வேண்டாம்.. அவர் பேசுவது யாருக்கும் புரிவதில்லை.. வைகோ கிண்டல்!
கோவை: நடிகர் ரஜினிகாந்த் பேசி வருவதை சிரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டல் செய்துள்ளார்.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா அல்லது நியமன பதவிகளுக்காக பாஜக அணுகியதா என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மதிமுக புத்துணர்ச்சி பெற்று தமிழகத்தின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. கோவை மாவட்டம் மதிமுகவின் கோட்டையாக இருக்கிறது.

திமுக ஆட்சி
அண்ணாவின் பிறந்தநாளை மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியுள்ளோம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் சிந்தனை கொண்ட கட்சிகளை வீழ்த்த திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் சிறப்பான ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. புதிய திட்டங்கள், செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

பாஜக மீது விமர்சனம்
மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்து உள்ளதால், பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த வரி விதிப்பால் அதானி மற்றும் அம்பானிக்கு எந்த பாதிப்பும் இல்லை.பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால், மற்ற எல்லா பொருட்களின் விலைவாசியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக நாளுக்கு நாள் மக்களிடையே மத்திய அரசின் மீதான வெறுப்பு வளர்ந்து வருகிறது.

தேசியக் கொடி
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச அனுமதிக்கு வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சொன்னது சரி தான். இது அவருடைய அரசியல் பண்பை காட்டுகிறது. ஆளும் அரசு அதை ஏற்க வேண்டும். அதேபோல், 75 ஆண்டுகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவது வரவேற்கக்கூடியது.

ரஜினிகாந்த் பற்றி கருத்து
நடிகர் ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரிவதில்லை. வேறு யாருக்கும் புரியவில்லை. அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறுகிறார். ஆட்களை சேர்த்ததுக்கு தேதி அறிவிக்கிறார். ஆனால் அடுத்த நாளே அரசியலுக்கு வரவில்லை என்று அறிவிக்கிறார். இதனால் நடிகர் ரஜினிகாந்த் பேசுவதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications