என்ன பதில் சொல்லப்போகிறது சட்டமன்றம்.. கொங்கு ஈஸ்வரனின் பேச்சால் கொதித்து போன வானதி சீனிவாசன்
கோவை: கொங்கு ஈஸ்வரன் பேசியதை எல்லாரும் பார்த்து கொண்டு இருந்தோம் தமிழக சட்டசபை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராக செயல்படும் என்றால் , சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சட்டமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவருவதற்கு அனைத்து மாநிலங்களும் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு ஏற்கும் என்றும் அனைத்து விஷயத்திலும் முதல் ஆளாய் கேள்வியை எழுப்பும் தமிழக அரசு முதல் கோரிக்கையை வைக்கட்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை மெட்ரோ ரயில்
அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் மிகவும் எதிர்பார்த்த டாஸ்மாக் கடை குறைப்பு ஒரு வார்த்தை கூட பேசப்பட வில்லை. கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து கவர்னர் உரையில் பேசப்படவில்லை. இது பற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்ட பின்பும் முதல்வர், முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது.

கோவை விமான நிலையம்
பொறுப்பான அரசாக இந்த அரசை பார்க்கின்றோம். பல்வேறு திட்ட பணிகள் வேகமாக நடைபெற வேண்டிய காலம் இது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கின்றது. மாநில அரசு வேறு சித்தாந்த பின்னணியில் வந்தாலும் மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும், மாநில அரசு வெள்ளை அறிக்கை கொடுத்து ,மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போக்கூடாது.

ஈஸ்வரன் பேச்சு
சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர் உரையில் இருந்து எடுத்ததை பாராட்டி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசி இருக்கின்றார். ஈஸ்வரன் பேசியதை எல்லாரும் பார்த்து கொண்டு இருந்தோம். தமிழக சட்டசபை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராக செயல்படும் என்றால் , சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு சட்டமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது .

நான் புதிது
ஜெய்ஹிந்த் வார்த்தை குறித்து பேசியற்கு ஏன் உடனே எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று கேட்கிறீர்கள்(செய்தியாளர்கள் கேட்டனர்) பா.ஜ.க சட்டமன்ற தலைவர்
நயினார் நகேந்திரன் பேசும்போதும் நிறைய குறுக்கீடுகள் இருந்தது. எங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கும் சட்டமன்றத்தில் இடம் வேண்டும். சட்டமன்றத்திற்கு நான் புதிது என்பதால் உடனடியாக இதை புரிந்து எதிர்வினையாற்றவில்லை. இது தொடர்பாக உடனடியாக கட்சி தலைவர்களிடம் பேசிய பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

வானதி கேள்வி
மத்திய அரசுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாதவர்களை, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை தான் தமிழக அரசு பொருளாதார குழுவில் நியமித்து உள்ளது. தமிழக அரசு. எனினும மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து தான் செயல்பட வேண்டும், இணைந்து செயல்பட்டால் தான் தமிழகத்திற்கு நல்லது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

குண்டர் சட்டம் ஏன்
சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை வெளியிட்ட கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது எனவும், இதற்கு முன்பு பிரதமரை பற்றி திமுக முக்கிய பிரமுகர்கள் தரம் தாழ்ந்து பதிவிட்டுள்ளனர், பழைய பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அந்தப் பதிவுகளுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , அதுதான் சரியான கருத்து சுதந்திரமாக இருக்கும் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
-
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications