3 நாட்களாக கடும் பதற்றம் எதிரொலி.. கோவை உளவுத்துறை உதவி ஆணையராக பார்த்திபன் நியமனம்.. டிஜிபி அதிரடி!
கோவை : கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையராக சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளராகப் பணியாற்றி வந்த பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து, கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையராக பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிங்காநல்லூர் சரக உதவி ஆணையாளராக பணியாற்றும் அருண் சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளராக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.ஐ.ஏ சோதனை
தேசிய புலனாய்வு முகமை தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்திலும் பரபர சோதனை நடைபெற்றது. இந்த சோதனையை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு
இது ஒருபுறமிருக்க, பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி எஸ்.சி எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அன்று இரவு கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தன.

போலீஸ் வளையத்தில் கோவை
இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் கோயம்புத்தூரில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கடந்த மூன்று நாட்களாக அடுத்தடுத்து கோவை பகுதியில் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களால் வழக்கத்துக்கு மாறாக பதற்றமடைந்த கோயம்புத்தூர், முழுமையாக போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளது.

அதி விரைவுப்படை
24 மணி நேரமும் சுழற்சி முறையில் 2 ஆயிரம் போலீசார் கோவை மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 400 அதிவிரைவு படை வீரர்களும் கோவையில் களமிறக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை அதிகாரி நியமனம்
இந்நிலையில், காலியாக இருக்கும் கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளர் பொறுப்புக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்காநல்லூர் சரக உதவி ஆணையாளராக பணியாற்றும் அருண் சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவுகளை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.
-
'கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்.. கோவை சிறுமியின் பெற்றோரிடம் போனில் பேசிய முதல்வர் விஜய் -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications