நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டியிடவுள்ளார். இந்நிலையில், கோவையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டியிடவுள்ளார். இந்நிலையில், கோவையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

திமுக கூட்டணி
தொடர்ந்து செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கூட்டணி கட்சிகளுடன் 2.30 மணி நேரம் ஆலோசனை நடத்தினோம். தேர்தலில் எப்படி எதிர்கொள்வது குறித்து பேசியுள்ளோம். தேர்தல் பணிகளை சிறப்பாக எடுத்து செல்வது பற்றி ஆலோசித்துள்ளோம். கோவையில் உள்ள 10 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது குறித்து திட்டங்களை வகுத்துள்ளோம்.
திமுகவின் வெற்றி நிச்சயம்
கோவையில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலுமே 1,000க்கும் மேற்பட்டோர் எழுச்சியான வரவேற்பை கொடுக்கிறார்கள். அதற்கு நான் காரணமல்ல. முதலமைச்சர் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் வெளிப்பாடு தான் கோவை தெற்கில் எனக்கு உற்சாகமான வரவேற்பளிக்க காரணம். கடந்த 5 வருடங்களில் கோவை தெற்கு தொகுதிக்கு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளார்.
செம்மொழி பூங்கா
மாநகராட்சிக்குள் எண்ணற்ற பணிகள் நடந்துள்ளன. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளனர். எந்தெந்த பகுதிகளில் என்ன தேவை இருக்கிறது என்பதை நன்கறிவேன். முதலமைச்சர் வழங்கியுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். கோவையின் அடையாளமான செம்மொழி பூங்கா கோவை தெற்கு தொகுதியில் தான் அமைந்துள்ளது. சனி, ஞாயிறுகளில் அங்கு சராசரியாக 20,000 மக்கள் வருகை புரிகிறார்கள்.
கோவை திட்டங்கள்
முதலமைச்சர் கோவைக்கு நிறைய திட்டங்கள் கொடுத்துள்ளனர். மக்கள் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். பெற்றி பெற்றவுடன் அந்தப் பணிகளை ஓராண்டில் நிறைவேற்றுவோம். முதலமைச்சர் மேட்டுப்பாளையமும், துணை முதலமைச்சர் கோவைக்கு வர வாய்ப்புள்ளது. தோழமை கட்சி தலைவர்களும் கோவையில் பிரச்சாரம் செய்வார்கள்.












Click it and Unblock the Notifications