திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி?
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் மீண்டும் அவர் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என்ஆர் கார்த்திகேயன் போட்டியிடும் நிலையில் அவருக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் 9 பேர் வென்றனர். கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வென்றார்.

இந்த முறையும் கோவை மாவட்டத்தை தக்க வைக்க அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், திமுக கூட்டணி கோவை மாவட்டத்தில் அதிக இடங்களை கைப்பற்ற துடித்து வருகிறது.
எஸ்பி வேலுமணியின் கோட்டை
இதில், கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கோட்டையாகும். இவர் கடந்த 3 முறை தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 4வது முறையாக அவர் தற்போது களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என்ஆர் கார்த்திகேயன் போட்டியிட்டுள்ளார்.
திமுக வேட்பாளரின் பெயரில் 4 பேர்
இந்நிலையில் தான் திமுக வேட்பாளர் என்ஆர் கார்த்திகேயன் பெயரில் 4 பேரின் போட்டியிடுகின்றனர் அதன்படி எம் கார்த்திகேயன், ஆர் கார்த்திகேயன், கார்த்திகேயன் ஆர் தொண்டாமுத்தூர், கார்த்திகேயன் ஆர் பூலுவாபட்டி ஆகியோர் களமிறங்கி உள்ளனர். வாக்காளர்களை குழப்பும் வகையில் இவர்கள் களமிறங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பின்னணியில் எஸ்பி வேலுமணி?
மேலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் எஸ்பி வேலுமணியின் நோட்டரியாக மகேந்திரன் என்பவர் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி எம்கார்த்திகேயன், ஆர் கார்த்தியேன், கார்த்திகேயன் ஆர் தொண்டாமுத்தூர், கார்த்திகேயன் ஆர் பூலுவாபட்டி ஆகியோருக்கும் அவர் நோட்டரி மகேந்திரனாக இருக்கிறார். இதனால் பின்னணியில் எஸ்பி வேலுமணி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications