Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'T23' ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல் நீடிப்பது ஏன்?.. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: நீலகிரி மாவட்டம் கூடலுார் அடுத்த மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 4 பேர் புலி தாக்கி இறந்தனர். டி23 எனப்படும் குறிப்பிட்ட ஒரு புலிதான் மனிதர்களை கொல்வதாக கூறப்பட்டது. அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் வனத்துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் ஆட்கொல்லி புலி அவர்களின் கையில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்று வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்

வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்

கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயிர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறியதாவது:-

மக்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை

மக்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை

அ.தி.மு.க ஆட்சியில் வன விலங்குகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை. ரூ.6 கோடி வரையிலான தொகையை மக்களுக்கு கொடுக்காமல் அ.தி.மு.க இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்ககோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசானை வெளியிட்டுள்ளார். வன விலங்குகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படமால் இருக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று கூறினார்.

T23 ஆட்கொல்லி புலி

T23 ஆட்கொல்லி புலி

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், T23 ஆட்கொல்லி புலியை பிடிக்க கேரளாவிலிருந்தும் வனத்துறையினர் வந்துள்ளனர். புலியைக் பிடிக்கும்போது மழை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதால் சற்று சிரமமாக உள்ளது. புலி ஆரம்பத்தில் சுற்றி திரிந்த இடமான தேவன் எஸ்டேட் பகுதியிலும் 30 வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர். அறிவியல் பூர்வமாக தொழில்நுட்ப ரீதியில் உயர்ரக கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் புலியை தேடி வருகிறோம்,.

கண்காணிப்பு கேமரா

கண்காணிப்பு கேமரா

புலி வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்பதையும் தொடர்ந்து கண்கானிப்பு கேமரா மூலமாக கண்காணித்து வருகிறோம். கூடிய விரைவில் புலியை பிடித்துவிடுவோம். சிங்கார காட்டு பகுதியில் வேறு புலிகளும் இருப்பதால் அதையும் கவனத்தில் கொண்டு தான் இந்த புலியை பிடிக்க திட்டமிட்டுள்ளோம்.

நடவடிக்கை

நடவடிக்கை

மண் சார்ந்த மரங்களை மாவட்டம்தோறும் வளர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

அயல்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தைல உள்ளிட்ட மரங்களைக் அகற்ற இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். வனத்தையொட்டிய அரசு தரிசு நிலங்களில், அந்த பகுதியையொட்டி வசிக்கின்ற மக்களின் கால்நடைகளை மேய்பதற்காக புற்கள் நடப்பட்டு கால்நடைகள் வனப்பகுதிக்குள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்' என்று வனத்துறை அமைச்சர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+