ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்.. அமமுக கூட்டணி அறிவிப்பு வெளியாகும்.. டிடிவி தினகரன் கொடுத்த டிவிஸ்ட்!
கோவை: ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பாக அமமுக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பதை முடிவு செய்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவில் யார் மீதும் வருத்தம் இல்லை என்றும் கூறிய டிடிவி தினகரன், 2026 தேர்தலில் 4 முனைப் போட்டியே நிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எந்தக் கட்சியுடன் யார் இணைவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்த அமமுக, இம்முறை யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், விஜய்யை முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார். இதனால் தவெக உடன் கூட்டணிக்கு செல்வாரா என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பாக அமமுக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை முடிவு செய்து அறிவிப்போம்.
எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வேறு யார் மீதும் அதிமுகவில் எங்களுக்கு வருத்தம் இல்லை.. எங்களுக்கு துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி.. துரோகத்திற்கு எதிராக தொடங்கப்பட்டதுதான் அமமுக.. அதற்கு எதிராக போராடி வருகிறோம். அண்ணன் செங்கோட்டையனும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரே தவெகவில் இணைந்தார்.
அமமுக உடன் சில கட்சிகள் பேசி வருகிறார்கள். துரோகத்தை வீழ்த்த எது சரியான கூட்டணியோ, அதில் அமமுக இடம்பெறும். அமமுக 2 முறை தனித்து நின்றது. அப்போது மக்கள் ஆதரவு அளிக்கவில்லை.. அதனால் இம்முறை கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளோம். அதேபோல் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அண்ணாமலை காரணம் அல்ல.
2021 சட்டசபைத் தேர்தலின் போது அதிமுகவுடன் பேசியது உண்மை தான். என்னுடன் இருந்த நிர்வாகிகள் 40 பேருக்கு சீட் கொடுக்குமாறும், நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறினேன். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே அமமுக போட்டியிட்டது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிடிவி தினகரன் ஜனவரி மாதத்தில் அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தார். தற்போது பிப்ரவரி மாதத்திற்கு கூட்டணி அறிவிப்பை ஒத்தி வைத்திருக்கிறார். இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி இறுதி வடிவம் பெற்ற பின், டிடிவி தினகரம் முடிவை அறிவிப்பார் என்று பார்க்கப்படுகிறது.
-
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications