Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை இளைஞரின் ஒரு நிமிட முட்டாள்தனம்.. மாமியார் இல்லை.. மனைவி கவலைக்கிடம்.. தவிக்கும் குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: விழுப்புரம் மாவட்டம் பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா என்பவர் கோயம்புத்தூரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மீனா என்பவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவா அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். சம்பவத்தன்று இரவு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிவா இரும்பு கம்பியால் மீனாவைத் தாக்கினாராம். அப்போது அதைத் தடுக்க வந்த மாமியார் தனலட்சுமிக்கு நடந்த சம்பவம் உறவினர்களை அடிப்போக வைத்துள்ளது.

குடும்ப தகராறில் கணவன் அல்லது மனைவி ஆவேசத்தில் எடுக்கும் முடிவு மொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்துவிடுகிறது. ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபடும் போது, நிதானத்தை இழந்து எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். அப்போது கையில் கிடைக்கும் பொருளை எடுத்து தாக்குகிறார்கள்.

What happened because of a young man from Coimbatore s one-minute act of foolishness

அந்த தாக்குதல் ஒருவருக்கு எமனாக மாறிவிடுகிறது. இதில் ஆத்திரத்தில் அறிவை இழந்து தாக்குதல் நடத்தியவர், காலத்திற்கும் சிறையில் தான் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். கோவையில் வேலை செய்து வரும் நபர், விழுப்புரத்தில் மாமியார், மனைவியை தாக்கி உள்ளார். இதில் மாமியார் உயிருடன் இல்லை.. மனைவி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு 30 வயது ஆகிறது. இவரது மனைவி மீனாவுக்கு 25 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு 5 வயதில், 3 வயதில் என 2 மகன்கள் உள்ளனர். இவர் கோயம்புத்தூர் பழமார்க்கெட்டில் சிவா வேலை செய்து வருகிறார். இதற்காக அவர், தனது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மீனாவிடம் சிவா அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவிற்கு சிவா, தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதுபற்றி அறிந்த மீனாவின் தாயான ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி (65) தனது மகள், பேரன்களை பார்ப்பதற்காக பாவந்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மீனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவா இரும்பு கம்பியால் தாக்கியாக கூறப்படுகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது மருமகனை தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த சிவா, இரும்பு கம்பியால் மாமியாரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியான நிலையில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலயே இறந்தார். இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் மீனாவும் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீனாவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை நேற்று கைது செய்தனர். தாயை கவலைக்கிடமான நிலையில், தந்தை சிறைக்கு சென்றுவிட்டார். பாட்டியும் உயிருடன் இல்லை.. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+