கோவை இளைஞரின் ஒரு நிமிட முட்டாள்தனம்.. மாமியார் இல்லை.. மனைவி கவலைக்கிடம்.. தவிக்கும் குழந்தைகள்
கோவை: விழுப்புரம் மாவட்டம் பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா என்பவர் கோயம்புத்தூரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மீனா என்பவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவா அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். சம்பவத்தன்று இரவு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிவா இரும்பு கம்பியால் மீனாவைத் தாக்கினாராம். அப்போது அதைத் தடுக்க வந்த மாமியார் தனலட்சுமிக்கு நடந்த சம்பவம் உறவினர்களை அடிப்போக வைத்துள்ளது.
குடும்ப தகராறில் கணவன் அல்லது மனைவி ஆவேசத்தில் எடுக்கும் முடிவு மொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்துவிடுகிறது. ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபடும் போது, நிதானத்தை இழந்து எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். அப்போது கையில் கிடைக்கும் பொருளை எடுத்து தாக்குகிறார்கள்.

அந்த தாக்குதல் ஒருவருக்கு எமனாக மாறிவிடுகிறது. இதில் ஆத்திரத்தில் அறிவை இழந்து தாக்குதல் நடத்தியவர், காலத்திற்கும் சிறையில் தான் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். கோவையில் வேலை செய்து வரும் நபர், விழுப்புரத்தில் மாமியார், மனைவியை தாக்கி உள்ளார். இதில் மாமியார் உயிருடன் இல்லை.. மனைவி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு 30 வயது ஆகிறது. இவரது மனைவி மீனாவுக்கு 25 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு 5 வயதில், 3 வயதில் என 2 மகன்கள் உள்ளனர். இவர் கோயம்புத்தூர் பழமார்க்கெட்டில் சிவா வேலை செய்து வருகிறார். இதற்காக அவர், தனது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மீனாவிடம் சிவா அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவிற்கு சிவா, தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதுபற்றி அறிந்த மீனாவின் தாயான ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி (65) தனது மகள், பேரன்களை பார்ப்பதற்காக பாவந்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மீனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவா இரும்பு கம்பியால் தாக்கியாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது மருமகனை தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த சிவா, இரும்பு கம்பியால் மாமியாரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியான நிலையில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலயே இறந்தார். இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் மீனாவும் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீனாவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை நேற்று கைது செய்தனர். தாயை கவலைக்கிடமான நிலையில், தந்தை சிறைக்கு சென்றுவிட்டார். பாட்டியும் உயிருடன் இல்லை.. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications