பிராங்க் போன் கால்.. "அந்த" பரபர வீடியோ.. கோவை 360 சேனலை தட்டி தூக்கிய போலீஸ்! ஆக்சன் எடுத்தது ஏன்?
கோயம்புத்தூர்: "கோவை 360 டிகிரி' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மீது கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்கள் வெளியிட்ட சில வீடியோக்கள்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது பிராங்க் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. பொது இடங்களில் பல யூ டியூப் சேனல்கள் பிராங்க் செய்ய தொடங்கிவிட்டன.
அதிக வியூஸ் வரும் என்பதற்காக வித்தியாச வித்தியாசமாக பிராங்க் செய்து வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே போய் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலும் பிராங்க் செய்கிறார்கள்.
பிராங்க் என்றால்.. திடீரென சாலையிலோ, பொது இடத்திலோ இருக்கும் ஒருவரிடம் ஏதாவது பேசி அவர்களை ஏமாற்றுவது. அல்லது கிண்டல் செய்வது, தொந்தரவு செய்வது.

பிராங்க்
கடைசியில் ஒரு எல்லை வரை அவர்களை தொல்லை செய்துவிட்டு, பின்னர் கேமரா இருக்கு பாருங்க என்று கூறி சமாதானம் செய்வது. இப்படி பிராங்க் செய்வதற்கு என்று தமிழ்நாட்டில் யூ டியூப் முழுக்க பல சேனல்கள் உருவாகி உள்ளன. இதற்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் கோவையில் பொது இடங்களில் பிராங்க் செய்ய கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை பிராங்க்
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படும், என்று கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. கோவையில் இருந்து செயல்படும் யூ டியூப் சேனல்கள் இதற்காக கண்காணிக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்தது. இந்த நிலையில்தான் கோவையில் இருந்து செயல்பட்டு வந்த கோவை 360 டிகிரி சேனல் நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது . இது தொடர்பாக கோவை மாநகரக் காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

எச்சரிக்கை
அதில், கோவை மாநகர காவல் ஆணையர் .V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில், வீடியோக்கள் எடுப்பவர்கள் குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்தது.

கோவை 360 டிகிரி
இந்த நிலையில், "கோவை 360 டிகிரி' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மேற்கண்ட Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து "கோவை 360 டிகரி" என்ற யூடியூப் சேனலில் வீடியா வெளியிட்டு உள்ளனர். இதை பார்த்து, அதன்பேரில் சைபர் க்ரைம் காவல் நிலைய குற்ற எண். 39/2022 U/s 354D IPC & 4 of TNPHW Act r/w 66E IT Act ன் படி "கோவை 360 டிகிரி" என்ற யூடியூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்சன் ஏன்?
Prank Videos தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கோவை 360 டிகிரி சேனலில் பொதுவாக பார்க்கில் இருக்கும் பெண்களிடம் பிராங்க் செய்யப்படும். இரண்டு ஆண்கள் பார்க்கில் உள்ள பெண்களிடம் சென்று அவர்களிடம் கிண்டலாக எதாவது பேசுவது போலவும், அவர்களின் பாடி கார்ட் போல செயல்படுவது போலவும் பிராங்க் செய்யப்பட்டது.

Prank Videos
அதேபோல் போனில் பேசும் பெண்களுக்கு அருகில் சென்று இளைஞர் ஒருவர் இன்னொரு போனில் பேசுவது போல் நடித்து, அந்த பெண் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்லி கிண்டல் செய்வது போலவும் பிராங்க் செய்யப்பட்டது. மேலும் பெண்களிடம் கேள்வி கேட்டு அதற்கு பதில் இல்லை என்றால் கிஸ் மீ, ஸ்லாப் மீ என்ற செய்வது போலவும் பிராங்குகளை இந்த சேனல் செய்து வந்தது. இந்த வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்தான் கோவை போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications