கடும் பொருளாதார நெருக்கடி! வீதிக்கு வந்த மக்கள்.. இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தினார் கோத்தபய.!
கொழும்பு : இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளன நிலையில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், வன்முறை சம்பவங்களை தவிர்க்க இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டு காலமாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனாவால் நாட்டின் பிரதான வருவாய்த் துறையாக விளங்கும் சுற்றுலாவில் முடக்கம் ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

மக்கள் போராட்டம்
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராடி வருகின்றனர். உணவு பொருட்கள் விலை விண்ணை முட்டியுள்ளதால் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வீட்டிற்கு வெளியே வியாழன் இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி, நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக அவர் பதவி விலகக் கோரி போராடிய நிலையில் இலங்கையில் வன்முறை மற்றும் குழப்பம் ஏற்பட்டது.

மீண்டும் முற்றுகை
போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 45 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், 5 போலீசார் காயமடைந்தனர். பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறையைத் தொடர்ந்து, கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொட, கல்கிசை மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனாலும் அங்கு நிலைமை கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஜனாபதிபதி வீட்டை முற்றுகையிட மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசரநிலை பிரகடனம்
இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சஷவின் இல்லத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான மக்கள் முயற்சித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன

இலங்கையில் பொது அவசரநிலை
முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான மக்கள் அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்ற நிலையில் தான் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசரகால நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். "இலங்கையில் பொது அவசரநிலை" இருப்பதாக தான் நம்புவதாக கூறியுள்ள கோத்தபய ராஜபக்ச கடுமையான சட்டங்களை செயல்படுத்துவது அவசியம், இது சந்தேக நபர்களை கைது செய்து காவலில் வைக்க பாதுகாப்பு பரந்த அதிகாரத்தை அளிக்கிறது" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications