இலங்கை போராட்டம்.. ஆயுதத்தை கீழே போட்ட ராணுவ வீரர்.. வாரி அணைத்துக்கொண்ட போராட்டக்காரர்கள்!
கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ராணுவ வீரர் ஒருவர் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video
இலங்கை நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு போர், கொரோனா, இயற்கை விவசாயம் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், மின்சாரம் என பல்வேறு விஷயங்களுக்கு அங்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் ஆளும் ராஜபக்ச தரப்பு தான் என்பதைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் மக்கள் போராட்டம் கையை உச்சத்தை எட்டியுள்ளது. அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டடத்தை கைப்பற்றியுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து சூழல் கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் முயற்சிகள் மேற்கொண்டது. அப்போது திடீரென ராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களை கீழே போட்டு போராட்டக்காரர்களுடன் கைகோர்த்தார்.
இதனைக் கண்ட போராட்டக்காரர்கள் ராணுவ வீரரை கொண்டாட்டத்துடன் வரவேற்று, வாரி அணைத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications