அட.. டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறிய இலங்கை அதிபர் மாளிகை.. சுற்றிப்பார்க்க குவிந்த மக்கள் கூட்டம்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்டுள்ள மக்கள் கொந்தளிப்பு காரணமாக அதிபர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் மக்கள் அதிபர் மாளிகைக்கு சுற்றுலா வரத்தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளதாரம் கடும் நெருக்கடியை சந்தித்தது
உள்நாட்டு போருக்கு பின்னர் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது. மட்டுமல்லாது அந்நிய செலாவணி கையிருப்பு, வேலைவாய்ப்பு ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

இதனையடுத்து மக்கள் தன்னெழுச்சியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனை அரசு ஒடுக்க முற்பட்ட போது கலவரங்கள் வெடித்தன. மக்கள் மேலும் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக கடந்த 9ம் தேதி அதிபர் கோத்தபயவின் மாளிகையான டெம்பிள் ட்ரீயை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கினர்.
இதனால் அதிபர் தப்பி சென்று தலைமறைவாகினார். மாளிகையில் அதிபர் இல்லாததையறிந்த பொதுமக்கள் மாளிகை முழுவதும் சுற்றி வந்து அதனை தங்களது செல்போனில் படம்பிடித்து வெளியிட்டனர். மாளிகையிலிருந்த நீச்சல் குளம், சமயல் அறை, படுக்கை அறை என அனைத்தையும் மக்கள் அனுபவித்தனர். அங்கேயே சமைத்தும் சாப்பிட்டனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகையை சுற்றிப்பாக்க படையெடுத்துள்ளனர். முன்னர் பெட்ரோல் மற்றும் உணவு பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த மக்கள் தற்போது டெம்பிள் ட்ரீ வாசலில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். இதற்காக நாட்டின் பல மூலைகளிலிருந்தும் மக்கள் வந்து குவியத் தொடங்கியுள்ளனர்.
சுற்றி பார்க்க வருபவர்களுக்கு சூடான சுவையான உணவும் அங்கேயே தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதனை மக்கள் வரிசையில் நின்று பெற்று வருகின்றனர். இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications