பாம்பு படகுப்போட்டியில் ராகுல் காந்தி.. துடுப்புகளை வீசி அசத்தல்.. கேரளாவில் உற்சாகம்!
ஆலப்புழா: கேரளாவில் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது புன்னமடா ஏரியில் நடைபெற்ற படகுப்போட்டியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துகொண்டது இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் 'பாரத் ஜோடோ' நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சிநடத்தி வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் நடைப்பயணம் கடந்த செப்.7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3800 கி.மீ. பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பு மக்களையும் ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.

கேரளாவில் 12வது நாள்
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு கேரள மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருகின்றனர். வீதியோறும் பொதுமக்கள் சந்திக்கும் ராகுல் காந்தி, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

மக்களை சந்திக்கும் ராகுல்
மக்களின் தேவைகள் என்ன, அவர்களின் கோரிக்கைகள் என்ன என்பதையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்கிறார். ராகுல் காந்தியின் நடைபயணத்தை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் விமர்சனங்களை கடந்து, ராகுல் காந்தியின் பயணம் தொடர்ந்து வருகிறது. இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.

படகுப்போட்டியில் ராகுல் காந்தி
இன்று காலை 12வது நாள் பயணமானது ஆலப்புழா மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையே புன்னமடா ஏரியில் நடைபெற்ற படகு பந்தய கண்காட்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், துடுப்பை கையில் ஏந்தி படகில் களமிறங்கிய ராகுல் காந்தி, துடுப்பு வீசி பந்தயத்தில் பங்கேற்றார்.

இளைஞர்கள் உற்சாகம்
ஒரு பக்கம் ராகுல் காந்தி, இன்னொரு பக்கம் கேசி வேணுகோபால் என்று துடுப்பை பிடித்து படகு போட்டியில் களமிறங்கியதால் இளைஞர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து படகுப் போட்டி முடிந்து கீழே இறங்கிய ராகுல் காந்தியுடன் இளைஞர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல் கேரளாவின் பாரம்பரியமான படகுப் போட்டியில் பங்கேற்றது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications