கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கடலூர்: கடலூரில் உள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பரவலாகப் பல இடங்களில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல ஆலைகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் ஆலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்படுவதில்லை. இதனால் இதுபோன்ற ஆலைகளில் வெடி விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

அதுபோன்ற ஒரு விபத்து தான் இப்போது கடலூர் எம். புதூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியில் சிறிய அளவிலான நாட்டு வெடி மற்றும் வானவெடி தயார் செய்யும் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது.
இதில் இன்று 7 பேர் பணிக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் வழக்கம் போல வான வெடிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிச் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தின் ஓடி வந்து உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
இருப்பினும், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இருவர் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வெடி விபத்தில் உயிரிழந்தோருக்குத் தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இதில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications