முந்திரி தொழிற்சாலை ஊழியர் மர்ம மரணம்.. திமுக எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி.. பாமக போராட்டம்
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோவிந்தராஜ் என்ற நபர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவர் பாமக கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அங்கு உள்ள கடலூர் திமுக எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான டிஆர்வி முந்திரி ஆலையில் இவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் வேலைக்கு சென்ற இவர் இரவு முழுக்க வீடும் திரும்பவில்லை. அங்கு கடந்த 6 வருடமாக வேலை செய்து வந்த கோவிந்தராஜ் 8 மணிக்கு முன்பாக வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் அன்று இரவு நெடு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

மரணம்
இந்த நிலையில் நேற்று அதிகாலை, கோவிந்தராஜ் மகன் செந்தில் வேலுக்கு, கோவிந்தராஜ் மரணம் குறித்த செய்தி சென்றுள்ளது. திமுக எம்பி டிஆர்வி ரமேஷின் உதவியாளர் தன்னிடம் இந்த மரண செய்தி குறித்து தெரிவித்ததாக செந்தில் வேல் குறிப்பிட்டுள்ளார். அதில், உங்கள் அப்பா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை பண்ருட்டி மருத்துவமனையில் வைத்து இருக்கிறோம் என்று தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காயம்
இந்த நிலையில் தனது அப்பா கோவிந்தராஜனின் மரணம் குறித்து செந்தில்வேல் சந்தேகம் எழுப்பி உள்ளார். தனது அப்பாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும். அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்கொலை செய்ய முகாந்திரம் இல்லை. அவர் திடமான மனிதர். அவரை அடித்து கொலை செய்துள்ளனர் என்று செந்தில் வேல் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதோடு இந்த முந்திரி ஆலைக்கு சொந்தமான திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் மற்றும் ஆலை ஊழியர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

புகார்
இந்த நிலையில் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் கோவிந்தராஜின் குடும்பத்தினர் திமுக எம்பி டிஆர்வி ரமேஷுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். பாமகவை சேர்ந்தவர் என்பதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவிந்தராஜ் கொல்லப்பட்டு இருப்பதாக போலீசாரிடம் இவர்கள் புகார் அளித்துள்ளனர். அதோடு இவரின் மரணம் குறித்து எங்களிடம் மிகவும் தாமதமாக தெரிவிக்கப்பட்டது. முன்பே தெரிவிக்கவில்லை.

விஷம்
அவர் விஷம் குடித்திருக்க வாய்ப்பே இல்லை . வேறு எதோ நடந்து இருக்கிறது. உடனே இதை போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோவிந்தராஜின் உறவினர்கள் போலீசாரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். இது அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவினர் இந்த மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

போராட்டம்
இதனால் மேல்மாம்பட்டு கிராமத்தில் பாமகவினர் கடும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். திமுக எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் இதில் உடனடியாக விசாரிக்க வேண்டும். உடலை மீண்டும் முறையாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராடி வருகிறார்கள்.
-
கடலூரில் மீண்டும் ஹைட்ரோகார்பன் அபாயம்! 4 கிணறுகள் அமைக்க விண்ணப்பம்.. விஜய் என்ன செய்ய போகிறார்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications