அதிமுக கொடிகளில் ஓபிஎஸ் - இபிஎஸ் புகைப்படம்.. விருத்தாசலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ருசிகரம்!
கடலூர்: விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக போராட்டத்தின் போது கட்டப்பட்டிருந்த கொடிகளில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் புகைப்படம் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே எழுந்த அதிகார மோதலில், எடப்பாடி பழனிசாமியின் கைகளே இதுநாள் வரை ஓங்கியுள்ளது. பொதுக்குழு முதல் அதிமுக அலுவலக சாவி வரை அனைத்து விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார். ஏற்கனவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோரை தன் பக்கம் இழுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக தனது தலைமையினை தொண்டர்கள் மத்தியில் நிரூபிக்க போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

இபிஎஸ் அறிவிப்பு
அண்மையில் தமிழக மின்வாரியத்தின் கடன் மற்றும் மத்திய அரசு அழுத்தம் ஆகியவை காரணமாக மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்மூலம் தொண்டர்கள் மத்தியிலும் எடப்பாடி பழனிசாமிக்கே மவுசு இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியும் என்று பார்க்கப்பட்டது.

கடலூர் போராட்டம்
இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டன.

ஒரே கொடியில் இருவர்
இதேபோல் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை மூத்த நிர்வாகிகள் முன்வைத்து பேசினர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த கொடிகள், பேனர்கள், தோரணங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் புகைப்படங்களும் இடம்பெற்றன.

தொண்டர்கள் குழப்பம்
ஓபிஎஸ் - இபிஎஸ் இடையிலான மோதல் உச்சத்தில் உள்ள நிலையில், ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி மற்றவர்களின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு வருகின்றனர். இந்த சூழலில், இருவரது புகைப்படங்களும் ஒரே கொடியில் இடம்பெற்றுள்ள சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications