கள்ளக்குறிச்சி ரணகளத்தில் நடந்த ‘கொள்ளை’! பசுமாடுகளுடன் எஸ்கேப்பான ‘பூவரசன்’! கைது படலம் தொடருமா?
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தின் போது தனியார் பள்ளியில் இருந்த பசு மாடுகளை திருடி சென்ற சின்னசேலத்தை சேர்ந்த 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாணவி படித்து வந்த பள்ளி முன்பு நேற்று முன்தினம் திடீரென 500-க்கும் மேற்பட்டோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அது வன்முறையாக மாறியது. பள்ளியில் இருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.

சூறையாடப்பட்ட பள்ளி
பள்ளி இருந்த நாற்காலிகள் சேர்கள் மாணவர் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து தீயிட்டு கொளுத்தினர். அப்போது கிடைத்த இடைவேளையில் போராட்டக்காரர்கள் என்று கூறி பள்ளிக்குள் புகுந்த சிலர் அங்கு இருந்த பொருட்களை எல்லாம் முடிந்த அளவு அள்ளி சென்றனர்.

பொருட்கள் திருட்டு
ஏசி நாற்காலி கணினி உள்ளிட்ட எதையும் விட்டு வைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்றனர். மேலும் கலவரத்தின்போது தனியார் பள்ளியில் இருந்த பசு மாடுகளையும் திருடி சென்றனர். இதையடுத்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
கலவரத்தின்போது எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களை கைப்பற்றினர்.

பசு மாடும் திருட்டு
கைப்பற்றப்பட்ட வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து, கலவரத்தில் ஈடுபட்டோரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கலவரத்தின்போது தனியார் பள்ளியில் இருந்த பசு மாடுகளை திருடி சென்ற சின்னசேலத்தை சேர்ந்த பூவரசன், கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஆதிசக்தி ஆகிய 3 இளைஞர்களை, சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தீவிர விசாரணை
மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சின்னசேலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 21 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கலவரத்தில் தொடர்புடையோர், சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்பியோர் உள்ளிட்டோரை கைது செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யும் படலும் தொடரும் என்கின்றனர் காவல்துறையினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications