ஞாயிறு முழு லாக்டவுன்... திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் வாசலில் நடந்த திருமணங்கள்
ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் தினமான இன்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மூடப்பட்டிருந்ததால் சாலைகளில் திருமணங்கள் நடைபெற்றன.
கடலூர்: முழு ஊரடங்கு தினமான இன்று திருமண முகூர்த்தம் உள்ளதால் கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் கோபுர வாசலில் உள்ள சாலைகளில் உறவினர்கள் முன்னிலையில் திருமணங்கள் நடைபெற்றன. 50க்கும் மேற்பட்ட புதுமணத்தம்பதியினர் சாலைகளிலேயே மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
Recommended Video
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தேவநாதசுவாமி கோயில் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறும்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் முறையாக மணமக்களின் குடும்பத்தினர் திருமணத்திற்கான அனுமதி வேண்டி விண்ணப்பித்த பிறகு தான் இங்கு திருமணம் நடத்தப்படும். அதற்காக, அவர்களுக்கு அரசின் மூலம் பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

கோவில்களில் அனுமதியில்லை
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த 3 நாட்களும் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண வரம் தரும் பெருமாள்
திருமண தடை நீக்கும் தலமாக தேவநாதசுவாமி கோயில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள். 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

சாலையில் திருமணம்
இந்நிலையில் இன்று முகூர்த்த நாளில் பல்வேறு குடும்பத்தினர் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் திருமணம் நடத்துவதாக முன்பே திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கோயில் மூடப்பட்டதால் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மூடப்பட்ட கோயிலின் எதிரே உள்ள சாலையில் தங்களது முக்கியக் உறவினர்களுடன் திருமணங்களை நடத்தினர்.

கொரோனா முன்னெச்சரிச்கை
இன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட திருமணங்கள் சாலைகளிலேயே நடைபெற்றன. திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்கள் மற்றும் உறவினர்களை முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தினார்.

விதிமுறைகளை பின்பற்றி திருமணம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் வாசலில் ராஜன், தேவி தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது அதேபோல் தண்டையார்பேட்டை தனியார் மண்டபத்தில் தொழிலதிபரின் இல்ல திருமண மணமகன் ஜீவா, சங்கீதா, மணமக்களின் திருமணம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அதேபோல் திருவொற்றியூர் பகுதியில் வீட்டில் தினகரன் பிரியங்கா ஆகியோரது திருமணம் வீட்டில் எளிமையாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட உறவினர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications